Showing posts with label முருங்கைக்காய். Show all posts
Showing posts with label முருங்கைக்காய். Show all posts

Thursday, 21 June 2018

மூலநோய்க்கு மருந்தாகும் முருங்கைக்காய்!

முருங்கை மரம், ‘கற்பகத்தரு’ என்று அழைக்கப்படுகிறது. அதன் எல்லாப் பாகங்களும் மனிதர்களுக்கு மருந்தாக, உணவாகப் பயன்படக்கூடியவை. குறிப்பாக முருங்கைக்காய். * முருங்கைக்காயில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன. * பெண்கள், வாரம் ஒருமுறை முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் அடிவயிற்றுவலி, மேகநோய், ரத்தச்சோகை சரியாகும். * மலச்சிக்கலைக் குணமாக்கும் ஆற்றல் முருங்கைக்காய்க்கு உண்டு. உடல் சூட்டைக் குறைக்கும். மூலநோய் உள்ளவர்கள், முருங்கைக்காயை நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். * முருங்கைக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு, பல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். * சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். பித்தப்பை சீராகச் செயல்பட உதவும். * விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் முருங்கைக்காய்க்கு உண்டு. * ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். மழைக்காலங்களில் வரக்கூடிய சளித்தொல்லை, காய்ச்சலில் இருந்து காக்கும். * சளி, ஆஸ்துமா, இழுப்பு மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாகச் செயல்படும்.

கல்விச்சோலை - kalvisolai health tips