Thursday 6 February 2020

10 இந்தியரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் புதிதாக 11.6 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சர்வதேச புற்றுநோய் தடுப்பு தினம் (பிப்.4) உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் புற்றுநோய் தொடர்பாக வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறி யிருப்பதாவது :

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 22.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் 2018-ல் மட்டும் 11.6 லட்சம் பேருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. நோயின் தீவிரம் அதிகமானதால் 7.84 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா வில் 10-ல் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. அதேபோல், 15 நபர் களில் ஒருவர் நோய் தாக்கம் அதிகமாகி, இறப்பை தழுவுகிறார்.

இந்தியாவில் பெரும்பாலும் 6 வகையான புற்றுநோயால்தான் மக்கள் அதிகமாக பாதிப்படை கிறார்கள். அதில், மார்பக புற்று நோய் 1,62,500 பேருக்கும், வாய் புற்றுநோய் 1,20,000 பேருக்கும், கர்ப்பப்பை புற்றுநோய் 97,000 பேருக்கும், நுரையீரல் புற்றுநோய் 68,000 பேருக்கும், வயிறு புற்று நோய் 57,000 பேருக்கும், குடல் புற்று நோய் 57,000 பேருக்கும் உள்ளது.

இதில் புதிய நோயாளிகள் எண் ணிக்கை 49 சதவீதமாக உள்ளது. அதாவது புதிதாக 5 லட்சத்து 70 ஆயிரம் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதில் 45 சதவீதம் வாய், நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய் புற்றுநோயாக உள்ளன.

இந்தியாவில் புதிதாக 5 லட்சத்து 87 ஆயிரம் பெண்களுக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. அதில் 60 சதவீதம் மார்பகம், கர்ப்பப்பை, வாய், குடல் புற்றுநோயாக உள்ளன.இந்தியர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு புகையிலை முக்கிய காரணியாக உள்ளது.

மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உடல் பருமனுடன் தொடர்புடையது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடு குறைவதாலும், ஒரே இடத்தில் இருந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறை அதிகமானதும் தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

நாடு முழுவதும் மார்பக புற்று நோயின் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. கடந்த ஆண்டுகளை விட 2.8 சதவீதம் மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது. கிராமப்புறங் களை விட நகர்ப்புறங்களில் இது அதிகமாக ஏற்படுகிறது. அதேபோல் இந்தியாவில் கர்ப்பப்பை, வாய் புற்றுநோயின் பாதிப்பு குறைந்து வந்தாலும், உலகளாவிய அளவில் 5-ல் ஒரு பங்கை இந்தியா கொண் டுள்ளது.

உலக அளவில் பொருளாதாரத் தில் பின் தங்கிய ஏழை நாடுகள் தொற்று நோய், புற்றுநோய் ஆகிய வற்றை எதிர்த்துப் போராடுவதிலும், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவ திலும் தங்களின் குறைவான வளங்களையே நம்பியுள்ளது.

உலகளவில் 5 பேரில் ஒருவர் தனது வாழ்நாளில் புற்றுநோயை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும். இதனால், ஏழ்மையான நாடுகளில் புற்றுநோய் காரணமாக ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.