- முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள எல்லோரும் பெரிய அளவில் மெனக்கெடுகிறோம்.
- அதேநேரம், நம் உடலை முழுமையாகத் தாங்கும் பாதத்தை கண்டுகொள்வதே இல்லை.
- தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள்.
- நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும்.
- அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும்.
- உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.
- வெது வெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தை கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
- அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தை தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.
- பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய், கற்றாழை கிரீம் போன்றவற்றைவும் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த வைத்தியம் போதுமானது.அதேநேரம், ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பாத வெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
- வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
- பாதவெடிப்பால் உண்டாகும் வலியை உணர முடியாததால் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
- பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
- பாதவெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக மெல்லிய தோல்களையுடைய செருப்புகளையே அணிய வேண்டும்.
- மிகவும் இறுக்கமான ‘ஷூ’ அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.
Sunday 27 October 2019
பாதவெடிப்பு
Thursday 24 October 2019
மாரடைப்பைவிட இதய செயலிழப்பு அதிகமான பேரை கொல்கிறது
- உலகளாவிய ஆய்வில் தகவல் இதய செயலிழப்பு ( அநேக நேரங்களில் மாரடைப்பு என்று குழப்பிக்கொள்ளப்படுகிறது.
- இதய செயலிழப்பு என் பதற்கு, இதயம் ஏற்கனவே செயலிழந்துவிட்டது என்பது பொருளல்ல.
- இதயம் அதன் செயல்பாட்டை நிறுத்தப்போகி றது என்றே பொருள்கொள்ள வேண்டும்.
- இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவை முற்றிலும் மாறுபட்ட கார ணங்கள் மற்றும் சிகிச்சைகளைக்கொண்டிருக்கின்ற இருவே றுபட்ட இதயநாள நோய்களாகும்.
- தற்போது, இந்தியா இதய நாள நோய்களின் பெரும் சுமையால் சிக்கி தவித்து வருகிறது, இதயநாள நோய்கள் அனைத்திலும், இதய செயலிழப்பு என்பதே அதிக உயிரிழப்பு விகிதம் மற்றும் திரும்பத் திரும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற வேண்டிய அவசியத்திற்கான முதன்மை காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது
- இந்தியாவில், இது 8-10 மில்லியன் நபர்களை பாதிக்கிறது என்று அறியப்பட்டுள்ளது.
- 55சதவீதம் இதய செய லிழப்பு நோயாளிகள், நோய் கண்டறியப்பட்டதற்குப் பிறகு குறைந்தபட்சம் ஒரு முறையாவது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்களாக இருக்கின்றனர்.
- திருவனந்தபுரம் இதய செயலிழப்பு பதிவக அறிக்கையின்படி 31 சதவீதம் நோயாளிகள் அவர்களுக்கு நோய் கண்டறியப்பட் டதிலிருந்து ஓராண்டுக்குள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்
- மற்றொரு பக்கத்தில், ஓராண்டுக்கு ஏறக்குறைய 2 மில்லியன் மாரடைப்பு நேர்வுகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில், மற்றும் இதன் காரணமாக, இதயம் வீக்கம் டைந்து பெரிதாகிறது.
- இதய செயலிழப்பு அறிகுறிகளுள் மூச் சுத்திணறல் அல்லது அதிவேக இதயத்துடிப்பு, கணுக்கால்கள், கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம், உயரமாக வைக்கப்ப டுகின்ற தலையணைகள் இல்லாமல் தூங்குவதில் சிரமம், தொடர்ந்து நிலையாக களைப்பாக உணர்வது ஆகியவை உள்ளடங்கும்.
இதய நோய்க்கான காரணங்கள்
மூச்சுத்திணறல், சோர்வு மற்றும் பலவீனம், வேகமான இதயத்துடிப்பு அல்லது அசாதாரணமான இதயத்துடிப்பு, திடீர் எடை அதிகரிப்பு, பசி உணர்வு இழப்பு, அடிவயிறு வீக்கம், கவனம் செலுத்துவதில் கடினம், மார்பு வலி, கால் மற்றும் கால் மணிக்கட்டு வீக்கம் இவை எல்லாம் இருந்தால் மாரடைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதயத்தில் சிறு சிறு இதர பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் விடும்போது, இதய செயல் இழப்பை தூண்டலாம்.
ரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் கொழுப்பின் அளவைக் குறைத்து கொள்ளுங்கள். மருந்துகளை சார்ந்து இருப்பதை ஓரளவிற்கு தவிர்க்க பழகுங்கள். ஒருவேளை, மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உங்கள் தினசரி உணவில், கொழுப்பு அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறே, சர்க்கரை மற்றும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இதய நோய் ஏற்பட ஒரு மிக முக்கிய காரணம், புகை பிடிப்பது. நிகோட்டின் உட்கொள்ளல், ரத்தக் குழாய்களை சுருக்கி, இதயம் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. கார்பன் மோனோ ஆக்சைடு, ரத்தத்தில் பிராணவாயு அளவைக் குறைக்கிறது, இதனால், ரத்தக் குழாய்களில் சேதம் ஏற்படுகிறது.
இன்றைய நாட்களில் பலரும் கணினி முன் அமர்ந்து வேலை செய்ய தொடங்கி விட்டனர். அதனால் ஒரு நாள் முழுக்கவே உட்கார்ந்தபடியே முடிந்து விடுகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இருப்பதில்லை. ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் இதய நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே முடிந்த அளவுக்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளவும். மதிய உணவிற்கு பின் சற்று நேரம் உங்கள் அறையிலேயே நடக்கலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கு உங்கள் நேரத்தில் சிறிதை ஒதுக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், உடனடியாக எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதயத்தில் சிறு சிறு இதர பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் விடும்போது, இதய செயல் இழப்பை தூண்டலாம்.
ரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் கொழுப்பின் அளவைக் குறைத்து கொள்ளுங்கள். மருந்துகளை சார்ந்து இருப்பதை ஓரளவிற்கு தவிர்க்க பழகுங்கள். ஒருவேளை, மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உங்கள் தினசரி உணவில், கொழுப்பு அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறே, சர்க்கரை மற்றும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இதய நோய் ஏற்பட ஒரு மிக முக்கிய காரணம், புகை பிடிப்பது. நிகோட்டின் உட்கொள்ளல், ரத்தக் குழாய்களை சுருக்கி, இதயம் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. கார்பன் மோனோ ஆக்சைடு, ரத்தத்தில் பிராணவாயு அளவைக் குறைக்கிறது, இதனால், ரத்தக் குழாய்களில் சேதம் ஏற்படுகிறது.
இன்றைய நாட்களில் பலரும் கணினி முன் அமர்ந்து வேலை செய்ய தொடங்கி விட்டனர். அதனால் ஒரு நாள் முழுக்கவே உட்கார்ந்தபடியே முடிந்து விடுகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இருப்பதில்லை. ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் இதய நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே முடிந்த அளவுக்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளவும். மதிய உணவிற்கு பின் சற்று நேரம் உங்கள் அறையிலேயே நடக்கலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கு உங்கள் நேரத்தில் சிறிதை ஒதுக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், உடனடியாக எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
Sunday 13 October 2019
இயற்கை தந்த சருமம்
தோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இருக்கிறார் ரூபம் சிங். அது ஆறு மாத குழந்தை என்பதால் டாக்டர்களுக்கும் சிகிச்சை அளிப்பது சவாலாக இருந்திருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் நோயை குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். உடுத்திய ஆடை முதல் உபயோகித்த கிரீம் வரை அனைத்தும் சருமத்தில் உராய்ந்து குழந்தைக்கு வேதனையை கொடுத்திருக்கிறது.
அதை பார்த்து பதறிப்போன ரூபா குழந்தைக்கு பொருத்தமான சரும பராமரிப்பு பொருட்களை தேடத்தொடங்கி இருக்கிறார். எந்த பொருளும் குழந்தையின் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியில் தனது தாத்தா - பாட்டி பின்பற்றிய இயற்கை வைத்தியத்தை நாடி இருக்கிறார். அதன்படி ரசாயன கலப்பில்லாமல் சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து குழந்தைக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார். அது நல்ல பலனை கொடுத்திருக்கிறது.
‘‘தோல் நோய் பாதிப்புக்குள்ளானதால் எனது மகள் மிகுந்த வலியை அனுபவித்தாள். பச்சிளம் குழந்தையாக இருந்ததால் அவளால் அழுகையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. ஒரு தாயாக அவளின் வலியை குறைப்பதற்கு என்னால் முடிந்த அத்தனை விஷயங்களையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது போல் நவீன மருத்துவமும் இல்லை.
தோல் மருத்துவர்களை அணுகியபோது மருந்துகளை மட்டுமே வழங்க முடியும் என்றார்கள். குழந்தையின் நிலையை பார்த்த மருத்துவர் மருந்துகளுக்கு பதிலாக இயற்கை வைத்தியத்தை நாட சொன்னார். வெர்ஜின் தேங்காய் எண்ணெய், பருத்தி உடை உள்ளிட்டவற்றை பயன்படுத்தினோம். ஓரிரு மாதங்களிலேயே நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதை பார்த்து அக்கம் பக்கத்தினரும் ஆச்சரியப்பட்டார்கள்’’ என்கிறார், ரூபம் சிங்.
ரூபம் சிங் ஐதராபாத்தை சேர்ந்தவர். மகளின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் இவரை இயற்கை சரும பராமரிப்பு பொருட்கள் மீது நாட்டம் கொள்ள வைத்திருக்கிறது. தனது சகோதரி அனுபமுடன் சேர்ந்து சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.
‘‘சருமத்திற்கு நன்மை தரும் இயற்கை பொருட்களை தேடிச்சென்று சேகரிக்கிறோம். அவை சருமத்தின் நலம் காக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இயற்கை மூலப்பொருளாகவே இருந்தாலும் அதனால் சருமத்திற்கு பலன் இல்லை என்றால் அவற்றை பயன்படுத்துவதில்லை. பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களை கொண்டு தயாராகும் பொருட்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிப்பவை. அதிலும் குழந்தையின் மென்மையான சருமத்திற்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். ஒவ்வாமை பிரச்சினையையும் உண்டாகும்’’ என்கிறார்.
அதை பார்த்து பதறிப்போன ரூபா குழந்தைக்கு பொருத்தமான சரும பராமரிப்பு பொருட்களை தேடத்தொடங்கி இருக்கிறார். எந்த பொருளும் குழந்தையின் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியில் தனது தாத்தா - பாட்டி பின்பற்றிய இயற்கை வைத்தியத்தை நாடி இருக்கிறார். அதன்படி ரசாயன கலப்பில்லாமல் சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து குழந்தைக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார். அது நல்ல பலனை கொடுத்திருக்கிறது.
‘‘தோல் நோய் பாதிப்புக்குள்ளானதால் எனது மகள் மிகுந்த வலியை அனுபவித்தாள். பச்சிளம் குழந்தையாக இருந்ததால் அவளால் அழுகையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. ஒரு தாயாக அவளின் வலியை குறைப்பதற்கு என்னால் முடிந்த அத்தனை விஷயங்களையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது போல் நவீன மருத்துவமும் இல்லை.
தோல் மருத்துவர்களை அணுகியபோது மருந்துகளை மட்டுமே வழங்க முடியும் என்றார்கள். குழந்தையின் நிலையை பார்த்த மருத்துவர் மருந்துகளுக்கு பதிலாக இயற்கை வைத்தியத்தை நாட சொன்னார். வெர்ஜின் தேங்காய் எண்ணெய், பருத்தி உடை உள்ளிட்டவற்றை பயன்படுத்தினோம். ஓரிரு மாதங்களிலேயே நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதை பார்த்து அக்கம் பக்கத்தினரும் ஆச்சரியப்பட்டார்கள்’’ என்கிறார், ரூபம் சிங்.
ரூபம் சிங் ஐதராபாத்தை சேர்ந்தவர். மகளின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் இவரை இயற்கை சரும பராமரிப்பு பொருட்கள் மீது நாட்டம் கொள்ள வைத்திருக்கிறது. தனது சகோதரி அனுபமுடன் சேர்ந்து சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.
‘‘சருமத்திற்கு நன்மை தரும் இயற்கை பொருட்களை தேடிச்சென்று சேகரிக்கிறோம். அவை சருமத்தின் நலம் காக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இயற்கை மூலப்பொருளாகவே இருந்தாலும் அதனால் சருமத்திற்கு பலன் இல்லை என்றால் அவற்றை பயன்படுத்துவதில்லை. பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களை கொண்டு தயாராகும் பொருட்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிப்பவை. அதிலும் குழந்தையின் மென்மையான சருமத்திற்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். ஒவ்வாமை பிரச்சினையையும் உண்டாகும்’’ என்கிறார்.
Subscribe to:
Posts (Atom)