மனச்சிதைவு நோயைக் குணப்படுத்த ரஷிய ஆய்வாளர்கள் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
மனநலப் பாதிப்புகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், ரஷியாவில் உள்ள பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி பெற்றுள்ளனர்.
டிஏஏஆர்1 என இப்போதைக்கு குறியீட்டுப் பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்தை ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்திப் பரிசோதித்தனர்.
அதற்கு எதிர்வினையாக எலிகளின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
இந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஏலியா சுக்னோவ் தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment