Thursday 21 June 2018

மூலநோய்க்கு மருந்தாகும் முருங்கைக்காய்!

முருங்கை மரம், ‘கற்பகத்தரு’ என்று அழைக்கப்படுகிறது. அதன் எல்லாப் பாகங்களும் மனிதர்களுக்கு மருந்தாக, உணவாகப் பயன்படக்கூடியவை. குறிப்பாக முருங்கைக்காய். * முருங்கைக்காயில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன. * பெண்கள், வாரம் ஒருமுறை முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் அடிவயிற்றுவலி, மேகநோய், ரத்தச்சோகை சரியாகும். * மலச்சிக்கலைக் குணமாக்கும் ஆற்றல் முருங்கைக்காய்க்கு உண்டு. உடல் சூட்டைக் குறைக்கும். மூலநோய் உள்ளவர்கள், முருங்கைக்காயை நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். * முருங்கைக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு, பல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். * சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். பித்தப்பை சீராகச் செயல்பட உதவும். * விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் முருங்கைக்காய்க்கு உண்டு. * ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். மழைக்காலங்களில் வரக்கூடிய சளித்தொல்லை, காய்ச்சலில் இருந்து காக்கும். * சளி, ஆஸ்துமா, இழுப்பு மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாகச் செயல்படும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

No comments: