tag:blogger.com,1999:blog-47560058683679276192024-03-19T10:28:19.150+05:30Kalvisolai Health Kalvisolai Health | Health.Kalvisolai.Com | கல்விச்சோலை கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/03938004093916092502noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-69341024313601809732020-12-20T09:43:00.005+05:302020-12-20T09:43:49.423+05:30மூல நோய்க்கான காரணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;"><div>40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் மூல நோய் முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்க தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசன வாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்த சோகை என பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.</div><div><br /></div><div>சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்கு செலுத்துவதுடன், ரத்தம் தேவையில்லாமல் சிரை குழாய்களில் தேங்கி நிற்பதையும் தவிர்க்கிறது. ஆனால் நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயில் இருந்து குடலுக்கு செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை. இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள 2 சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போல திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.</div><div><br /></div><div>மலச்சிக்கல் மூல நோய்க்கு முக்கிய காரணம். வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூல நோயை ஏற்படுத்தும். கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர, வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கி தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.</div><div><br /></div><div>சிலருக்கு பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், மாமிச உணவு வகைகள், விரைவு உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும் ரத்தக் குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.</div><div><br /></div><div>நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.</div><div><br /></div><div>40 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.</div></div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!--MI AD 3-->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-73562870417528538842020-04-24T10:19:00.001+05:302020-04-24T10:19:25.591+05:30வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் அற்புத கசாயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கசாயத்தை குடித்து
பலன்பெறுங்கள்.<br />
<br />
தேவையான பொருட்கள்<br />
மணத்தக்காளிக் கீரை - ஒரு கைப்பிடி
வெந்தயம் - 30 கிராம்
சின்ன வெங்காயம் - 75 கிராம்
ஏலரிசி - ஒரு கிராம்<br />
<br />
செய்முறை<br />
முதலில் மணத்தக்காளிக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக்
கொள்ளவும். சின்ன வெங்காயம், வெந்தயம், ஏலரிசி ஆகியவற்றை சிவக்க
வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 750 மி.லி அளவு தண்ணீர்
ஊற்றி அதில் மணத்தக்காளிக் கீரை , சிவக்க வறுத்து வைத்துள்ள
வெங்காயம், வெந்தயம் , ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க
வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி அளவாக சுண்ட வைத்து
கசாயமாக்கி இறக்கி வடிகட்டி குடிக்கவும்<br />
<br />
பயன்கள்<br />
இந்தக் கசாயம் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்த உதவும்
அருமருந்தாகும். இந்த கசாயத்தை தயார் செய்து காலை , மதியம் ,
மாலை என மூன்று வேளையும் வேளையும் தலா 50 மி.லி அளவாக குடித்து
வரவும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும்
சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று
தின்று முழுங்கவும்.<br />
<br />
குறிப்பு<br />
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக
சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர
மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
<br />
<br />
KOVAI HERBAL CARE<br />
<br />
FOOD CONSULTANCY CENTER<br />
<br />
- கோவை பாலா<br />
<br />
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.<br />
<br />
Cell: 96557 58609, 75503 24609<br />
<br />
Covaibala15@gmail.com</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-34773213797458571132020-04-05T22:42:00.001+05:302020-04-05T22:42:47.692+05:30கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.<br />
<br />
அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?<br />
<br />
காற்றில் உயிர்வாழும் நேரம்<br />
<br />
இருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.<br />
<br />
இந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.<br />
<br />
ஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.<br />
<br />
ஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.<br />
<br />
இன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.<br />
<br />
இந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.<br />
<br />
கொரோனா வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?<br />
<br />
மனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை.<br />
<br />
இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின்மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும்.<br />
<br />
அதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, வைரஸ் தொற்றியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதுதான் மனித உடலுக்குள் இந்த Sars-CoV-2 கொரோனா வைரஸ் செல்வதற்கான முக்கியமான வழியாக உள்ளது.<br />
<br />
உலோகங்கள், பிளாஸ்டிக், கண்ணாடி<br />
<br />
கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.<br />
<br />
குளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.<br />
<br />
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் Sars-CoV-2 வகை கொரோனா வைரஸ் உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.<br />
<br />
எனினும், தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன.<br />
<br />
கொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்ளவு நேரம் இருக்கும்?<br />
<br />
துணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.<br />
<br />
எனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.<br />
<br />
சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.<br />
<br />
Sars-CoV-2 கொரோனா வைரஸை பொருட்கள் மீது அழிப்பது எப்படி?<br />
<br />
தற்போது பரவி வரும் Sars-CoV-2 கொரோனா வைரஸ் 62-71% ஆல்கஹால் அளவுள்ள கிருமி நாசினி அல்லது 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பிளீச்சிங் பவுடர் அல்லது 0.1% சோடியம் ஹைட்ரோகுளோரைட் உள்ள வீட்டுப் பயன்பாட்டுக்கான பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்து ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்தில் ஒழித்து விடலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-8160976337054594562020-04-05T22:39:00.000+05:302020-04-05T22:39:01.338+05:30கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங்களும், விளக்கமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.<br />
<br />
இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள்.<br />
<br />
இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.<br />
<br />
நோயாக உருவாகும் காலம்<br />
இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம்.<br />
<br />
உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.<br />
<br />
சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.<br />
<br />
தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.<br />
<br />
ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது.<br />
<br />
நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.<br />
<br />
லேசான நோய்<br />
ஏறத்தாழ அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும்.<br />
<br />
கொரானா வைரஸ் தொற்று பரவிய 10 பேரில் எட்டு பேருக்கு கோவிட் - 19 நோய் லேசான பாதிப்பாக அமையும். காய்ச்சலும், இருமலும் தான் இதற்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன.<br />
<br />
உடல் வலிகள், தொண்டை வறட்சி, தலைவலியும் கூட வரலாம். ஆனால் இவை வந்தாக வேண்டும் என்றும் கிடையாது.<br />
<br />
காய்ச்சலும், அசௌகரியமாக உணர்தலும், தொற்று பரவியதற்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. இந்த வைரஸ் ஊடுருவல் கிருமியாக இருக்கும். உடலின் மற்ற செல்கள், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.<br />
<br />
இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும். ஆனால் உடல் வலி, காய்ச்சலையும் ஏற்படுத்தும்.<br />
<br />
கொரோனா வைரஸ் இருமல் ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருக்கும் பின்னர் வைரஸ் தொற்று ஏற்படும்போது, செல்களில் எரிச்சல் தோன்றும்.<br />
<br />
சிலருக்கு இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும் - வைரஸால் கொல்லப்பட்ட நுரையீரல் செல்களின் கெட்டியான சளியாக அது இருக்கும்.<br />
<br />
படுக்கையில் கிடந்து ஓய்வெடுத்தல், நிறைய பானங்கள் குடித்தல் மற்றும் பாரசிட்டமால் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் விசேஷ சிகிச்சை முறை எதுவும் தேவையில்லை.<br />
<br />
இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு இருக்கும் - இதிலேயே பெரும்பாலானோர் குணமாகிவிடுவர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும்.<br />
<br />
இருந்தபோதிலும், சிலருக்கு தீவிர கோவிட் -19 நோய் பாதிப்பு ஏற்படும்.<br />
<br />
இந்த நிலையில், இந்த நோய் பற்றி நாம் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் இவை. மூக்கு ஒழுகுதல் போன்ற தீவிர சளி அறிகுறிகளும் ஏற்படலாம் என்றும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.<br />
<br />
தீவிர பாதிப்பு<br />
வைரஸ் பாதிப்புக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் உக்கிரமாக செயல்படும்போது, இது நோயாக உருவாகும்.<br />
<br />
உடலின் மற்ற பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்த இது ரசாயன சமிக்ஞைகளை அனுப்பும். ஆனால் இதை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான அழற்சி ஏற்பட்டால் உடல் முழுக்க பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.<br />
<br />
``நோய்த் தடுப்பாற்றல் எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உடல் அழற்சி இருக்கிறது. இதை எப்படி செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை'' என்று லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நத்தாலி மேக்டெர்மோட் கூறியுள்ளார்.<br />
<br />
நுரையீரல் அழற்சி, நிமோனியா எனப்படுகிறது.<br />
<br />
உங்கள் வாயில் இருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் அதனால் செல்ல முடியும் என்றால், நுண்ணிய காற்று அறைகளில் அதனால் போய் அமர்ந்து கொள்ள முடியும்.<br />
<br />
அங்கு தான் ரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், நிமோனியாவில் இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும்.<br />
<br />
சிலருக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படும்.<br />
<br />
சீனாவில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால், 14 சதவீதம் பேருக்கு இந்த நிலை வரை பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.<br />
<br />
சிக்கலான நிலையில் பாதிப்பு<br />
பாதிக்கப்பட்டவர்களில் 6 சதவீதம் பேருக்கு சிக்கலான நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.<br />
<br />
இந்த சூழ்நிலையில் தான் உடல் செயல்பாட்டை இழக்கிறது, இதுவே மரணம் ஏற்படவும் காரணமாக உள்ளது.<br />
<br />
நோய்த் தடுப்பாற்றல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்துவது தான் பிரச்சினை.<br />
<br />
ரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு குறையும்போது உடல் உறுப்புகள் செயல்பாடு குறையும் அல்லது முழுமையாக நின்றுவிடும்.<br />
<br />
நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்களை அது தடுக்கக் கூடும். உங்கள் குடல்களும் பாதிக்கப்படலாம்.<br />
<br />
``நீங்கள் அதற்கு ஆட்படும் அளவுக்கு பெரிய அளவில் அழற்சியை இந்த வைரஸ் ஏற்படுத்தலாம். அது பல உறுப்புகளை செயல் இழக்கச் செய்யலாம்'' என்று டாக்டர் பரத் பன்கானியா கூறுகிறார்.<br />
<br />
வைரஸை நோய்த் தடுப்பாற்றலால் அடக்கியாள முடியாமல் போனால், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அது பரவி, இன்னும் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தும்.<br />
<br />
இந்த நிலையில் உடலின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ECMO உள்ளிட்ட சிகிச்சைகள் அதில் அடங்கும்.<br />
<br />
தடிமனான குழாய்களில் ரத்தத்தை வெளியில் எடுத்து, ஆக்சிஜனேற்றம் செய்து, மீண்டும் உடலில் செலுத்தக் கூடிய செயற்கை நுரையீரல் இது.<br />
<br />
ஆனால் உறுப்புகள் உடலை உயிருடன் வைத்துக் கொள்ள முடியாமல் போகும் போது, அது உயிர்ப்பலி ஏற்படுத்தக் கூடும்.<br />
<br />
முதலாவது மரணங்கள்<br />
சிறந்த சிகிச்சைகள் அளித்தும் சில நோயாளிகள் எப்படி இறந்தார்கள் என்பதை டாக்டர்கள் விவரித்துள்ளனர். முதல் இரு நோயாளிகள் சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஜின்யின்டன் மருத்துவமனையில் இறந்தனர் என்று லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
முதலாவது நபர், 61 வயதான ஆண், மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சமயத்திலேயே தீவிர நிமோனியா பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்.<br />
<br />
அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் இருந்தது. வென்டிலேட்டர் வைத்த பிறகும், அவருடைய நுரையீரல் செயல் இழந்துவிட்டது, இருதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது.<br />
<br />
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 நாட்களில் அவர் இறந்து போனார்.<br />
<br />
இரண்டாவது நோயாளி, 69 வயது ஆண், அவருக்கும் தீவிர மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தது.<br />
<br />
அவருக்கு ECMO சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. தீவிர நிமோனியா மற்றும் ரத்த அழுத்த குறைபாட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் இறந்து போனார்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-4600678591836335462020-04-05T22:36:00.003+05:302020-04-05T22:36:54.548+05:30கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 177 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 1,202,827 பேருக்குப் பரவியுள்ளது. 64,771 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.<br />
<br />
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 2,46,886 - ஆக உயர்ந்துள்ளது.<br />
<br />
இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,588 ஆக உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.<br />
<br />
கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.<br />
<br />
கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?<br />
உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.<br />
<br />
கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?<br />
நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.<br />
<br />
உங்களுக்கு கொரோனா உள்ளது என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?<br />
நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.<br />
<br />
நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.<br />
<br />
உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.<br />
<br />
கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?<br />
இந்த கோவிட் 19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.<br />
<br />
இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.<br />
<br />
சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.<br />
<br />
ஒருவரின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ள எந்த பகுதிகளில் தெர்மாமீட்டர் வைத்து சோதிக்கலாம்?<br />
<br />
கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன?<br />
கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.<br />
<br />
தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.<br />
<br />
கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?<br />
கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.<br />
<br />
56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:<br />
<br />
6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.<br />
14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை<br />
80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.<br />
வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.<br />
<br />
கொரோனாவை குணப்படுத்த முடியுமா?<br />
தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும். விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.<br />
<br />
கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.<br />
<br />
கொரோனா எங்கிருந்து வந்தது?<br />
இந்த SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெளவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.<br />
<br />
கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்<br />
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல்<br />
கொரோனா வைரஸ் : சிக்கன் சாப்பிடலாமா? வெயில் அவசியமா? - மருத்துவர் விளக்கம்<br />
கொரோனா: யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம்<br />
கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது?<br />
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.<br />
<br />
இரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.<br />
<br />
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுபரவலை தடுப்பது எவ்வாறு?<br />
<br />
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.<br />
<br />
Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.<br />
<br />
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.<br />
<br />
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.<br />
<br />
எனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும்,<br />
<br />
உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும்<br />
மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும்<br />
கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.<br />
<br />
கொரோனா தொற்றை கையாள இந்தியா தயாராக உள்ளதா?<br />
உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?<br />
<br />
ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.<br />
<br />
இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.<br />
<br />
அருகில் உள்ள நேபாளத்துடன் சர்வதேச எல்லையை பகிரும் ஐந்து மாநிலங்களில் எல்லைப் பகுதியில் வாழும் 27,000-க்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் 10 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருபவர்களைப் பரிசோதிப்பதற்காக, இரானில் ஓர் ஆய்வகத்தை இந்தியா அமைக்கிறது.<br />
<br />
இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில் இந்த வைரஸ் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.<br />
<br />
இந்த வைரஸ் தீவிரமாகப் பரவ நேரிட்டால் நிலைமையை எப்படிக் கையாள்வது என்று சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டு வசதிகள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.<br />
<br />
இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுபாடுகள் என்னென்ன?<br />
இந்தியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.<br />
<br />
இத்தாலி, சீனா, இரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியிலிருந்து பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு வந்தவர்கள் அனைவரையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இது வரும் மார்ச் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
"இந்தியர்கள் அவசியமில்லாத பயணங்களை ரத்து செய்ய கேட்டு கொள்ளப்படுகின்றனர். மேலும் வெளிநாட்டுக்கு பயணம் செய்து வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்," என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.<br />
<br />
மாஸ்க் அணிவது பயன் தருமா?<br />
காற்றில் உலவும் பாக்டீரியா அல்லது வைரஸை தடுப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் பெரிய பலனை தராது. அந்த மாஸ்க் அழுத்தமாக இருக்காது என்பதாலும், அதில் காற்று தடுப்பான் இல்லை என்பதாலும், கண்கள் மூடப்படாது என்பதால் அவ்வளவு பலனை தராது. என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் டேவிட் காரிங்டன்<br />
<br />
உங்களை நீங்களே எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்?<br />
நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி, பணி மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-59172709482038046402020-03-16T08:15:00.001+05:302020-03-16T08:15:35.751+05:30கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் முதன் முதலில் மக்களை பாதிக்கத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் 114 நாடுகளில் பரவி மக்களைப் பாதித்துள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுக்க பதற்றம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார மையம் உள்ளிட்ட சர்வதேச நிறு வனங்கள் அறிவுறுத்தி இருக்கின்றன.<br />
<br />
கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்கள்:<br />
<br />
கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் என்பதால் அது ஒரு நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு நேரடியாகவும் மறைமுக மாகவும் பரவக்கூடும்.<br />
<br />
மூக்கு, தொண்டை, சுவாசக் குழாய் மற் றும் நுரையீரலை பாதிக்கும் தொற்று இது.<br />
<br />
இந்த காய்ச்சல் 60 வயதுக்கு மேற் பட்டோர் மற்றும் உடல் ஆரோக்கியம் குன்றியவர்களையே தீவிரமாகப் பாதிக் கிறது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக் கும் மிதமான தாக்கத்தையே ஏற்படுத்தக் கூடியது.<br />
<br />
கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். 80 சதவீதத்தினருக்கு மிதமான பாதிப்பு மட்டுமே இருக்கும். உரிய மருத்துவ சிகிச்சை மூலம் இரண்டு வாரங்களில் நீங்கள் குணமடைந்து விடலாம்.<br />
<br />
கோவிட் -19 காய்ச்சல் உள்ளவர் தும்மி னாலோ, இருமினாலோ பரவும் நீர்த்துளி மற்றொருவரின் கண், நாசி, வாய் பகுதியில் பட்டால் காய்ச்சல் தொற்றும்.<br />
<br />
காய்ச்சல் உள்ளவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் தொடும்போது பரவும்.<br />
<br />
உணவு வழியாக இந்த வைரஸ் பரவாது.<br />
<br />
கோழி, முட்டை ஆகியவற்றை சாப்பிடுவ தால் பரவாது.<br />
<br />
சாதாரண வைரஸ் காய்ச்சலையும் கோவிட் - 19 காய்ச்சலையும் இடை யில் வேறுபடுத்துவது எப்படி என்ற குழப்பம் நிலவுகிறது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை இருந்தாலோ, சீனா, ஈரான், இத்தாலி, கொரியா உள் ளிட்ட கோவிட் - 19 வைரஸ் பரவி இருக் கும் நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் சென் றிருந்தாலோ, கோவிட்-19 காய்ச்சல் உள்ள வர்களுடன் இருந்தாலோ, கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவ மனைக்கோ அல்லது மையத்துக்கோ சென்றிருந்தாலோ உங்களுக்கு வந்திருப் பது கோவிட்-19 பாதிப்பாக இருக்கலாம்.<br />
<br />
மிதமாக தாக்கும்பட்சத்தில் 2 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை கோவிட்-19 வைரஸ் தாக்கம் நீடிக்கும். ஒருவேளை காய்ச்சல், சளி, தொண்டைக்கட்டு இருக்குமானால் பதற்றமடைய வேண்டாம். நாளொன்றுக்கு 2-3 முறை ஆவிபிடியுங்கள், சுத்தமான நீரை அடிக்கடி பருகுங்கள், அவ்வப்போது கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள், காய்ச்சல் தீவிரமடைவதாகத் தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள். மருத்துவரின் வழிகாட்டுதலின்படி முறையாக மருந்தை உட்கொள்ளுங்கள்.<br />
<br />
ஒருவருக்கு கடும் காய்ச்சல் இருப்பதா லேயே அவருக்கு கோவிட்-19 வைரஸ் தாக்கிவிட்டதாக முடிவுசெய்துவிடுவது தவறு. காய்ச்சல் வந்தவர்க்கெல்லாம் கோவிட்-19 வைரஸ் சோதனை அவசியமில்லை. அதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.<br />
<br />
வைரஸ் பாதித்தாலும் அதிலிருந்து முழுவதுமாக குணமடைய முடியும். சிறப்பு சிகிச்சை ஏதுமின்றி இதிலிருந்து 80 சதவீதத்தினர் குணமடைந்துவிட்டார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.<br />
<br />
கோவிட்-19 வைரஸ் வராமல் தடுக் கும் நோய் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக் கப்படவில்லை. இருப்பினும் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் பூரணமாகக் குணமடைந்து இருக்கிறார்கள்.<br />
<br />
பூண்டு சாப்பிடுவதால் கோவிட்-19 வைரஸை தடுக்க முடியும் என்பது பொய்.<br />
<br />
வெயில் காலத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாது என்பதற்கு அறிவியல் நிரூபணம் ஏதுமில்லை. இருப்பினும் வெப்பம் அதிகரித்தால் கோவிட்-19 வைரஸ் பரவும் வேகம் குறையலாம் என்று கூறப்படுகிறது.<br />
<br />
கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவரின் சளி, எச்சில் ஆகியன காகிதம், மரம், அட்டை, கண்ணாடி, பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு ஆகிய பொருட்களின் மீது படிந்தால் 8-10 மணி நேரம் வரை கோவிட்-19 வைரஸ் வீரியம் குறையாமல் உயிருடன் இருக்கும். அப்பொருட்களைத் தொடுபவர்களுக்கு காய்ச்சல் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.<br />
<br />
மூன்று அடுக்கு கொண்ட முகக் கவசத்தை கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் உடையவர்கள் அணிவது நல்லது.<br />
<br />
உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?<br />
சோப்பு போட்டு நீரில் கைகளை நன்றாகக் கழுவுதல்.<br />
<br />
சோப்பு, தண்ணீர் கிடைக்காதபோது சானிடைஸர் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுதல்.<br />
<br />
அழுக்கான கைகளால் கண், வாய், மூக்கு ஆகிய உறுப்புகளை தொடுவதை தவிர்த்தல் .<br />
<br />
இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் தள்ளி இருப்பது நல்லது.<br />
<br />
கை குலுக்குவதற்கு பதில் கைகூப்பி வணக்கம் சொல்லுதல்.<br />
<br />
உங்களுக்குப் பிரியமானவர்களை பாதுகாப்பது எப்படி?<br />
இருமல், தும்மல் வரும் போது கட்டாயம் கைக்குட்டையை பயன்படுத்துதல்.<br />
<br />
கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதையும் வெளியூர் பயணங்களையும் தவிர்த்தல்.<br />
<br />
நோய் தொற்று இருக்குமானால் கட்டாயம் முகக் கவசம் அணிதல்.</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-55878432313996971382020-02-06T06:09:00.001+05:302020-02-06T06:09:08.223+05:3010 இந்தியரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இந்தியாவில் 2018-ம் ஆண்டில் புதிதாக 11.6 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.<br />
<br />
சர்வதேச புற்றுநோய் தடுப்பு தினம் (பிப்.4) உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் புற்றுநோய் தொடர்பாக வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறி யிருப்பதாவது :<br />
<br />
இந்தியாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 22.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் 2018-ல் மட்டும் 11.6 லட்சம் பேருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. நோயின் தீவிரம் அதிகமானதால் 7.84 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா வில் 10-ல் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. அதேபோல், 15 நபர் களில் ஒருவர் நோய் தாக்கம் அதிகமாகி, இறப்பை தழுவுகிறார்.<br />
<br />
இந்தியாவில் பெரும்பாலும் 6 வகையான புற்றுநோயால்தான் மக்கள் அதிகமாக பாதிப்படை கிறார்கள். அதில், மார்பக புற்று நோய் 1,62,500 பேருக்கும், வாய் புற்றுநோய் 1,20,000 பேருக்கும், கர்ப்பப்பை புற்றுநோய் 97,000 பேருக்கும், நுரையீரல் புற்றுநோய் 68,000 பேருக்கும், வயிறு புற்று நோய் 57,000 பேருக்கும், குடல் புற்று நோய் 57,000 பேருக்கும் உள்ளது.<br />
<br />
இதில் புதிய நோயாளிகள் எண் ணிக்கை 49 சதவீதமாக உள்ளது. அதாவது புதிதாக 5 லட்சத்து 70 ஆயிரம் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதில் 45 சதவீதம் வாய், நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய் புற்றுநோயாக உள்ளன.<br />
<br />
இந்தியாவில் புதிதாக 5 லட்சத்து 87 ஆயிரம் பெண்களுக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. அதில் 60 சதவீதம் மார்பகம், கர்ப்பப்பை, வாய், குடல் புற்றுநோயாக உள்ளன.இந்தியர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு புகையிலை முக்கிய காரணியாக உள்ளது.<br />
<br />
மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உடல் பருமனுடன் தொடர்புடையது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடு குறைவதாலும், ஒரே இடத்தில் இருந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறை அதிகமானதும் தான் இதற்கு முக்கிய காரணமாகும்.<br />
<br />
நாடு முழுவதும் மார்பக புற்று நோயின் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. கடந்த ஆண்டுகளை விட 2.8 சதவீதம் மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது. கிராமப்புறங் களை விட நகர்ப்புறங்களில் இது அதிகமாக ஏற்படுகிறது. அதேபோல் இந்தியாவில் கர்ப்பப்பை, வாய் புற்றுநோயின் பாதிப்பு குறைந்து வந்தாலும், உலகளாவிய அளவில் 5-ல் ஒரு பங்கை இந்தியா கொண் டுள்ளது.<br />
<br />
உலக அளவில் பொருளாதாரத் தில் பின் தங்கிய ஏழை நாடுகள் தொற்று நோய், புற்றுநோய் ஆகிய வற்றை எதிர்த்துப் போராடுவதிலும், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவ திலும் தங்களின் குறைவான வளங்களையே நம்பியுள்ளது.<br />
<br />
உலகளவில் 5 பேரில் ஒருவர் தனது வாழ்நாளில் புற்றுநோயை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும். இதனால், ஏழ்மையான நாடுகளில் புற்றுநோய் காரணமாக ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.<br />
<br />
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-79546601051264513922020-01-21T07:56:00.000+05:302020-01-21T07:59:19.604+05:30மூன்று முறை பல் துலக்குங்கள்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br />
<ul>
<li>தினமும் மூன்று தடவைக்கு மேல் பல் துலக்குவது ஒழுங்கற்ற இதய துடிப்பு, இதய செயலிழப்பு போன்ற அபாயங்களை குறைக்க வழிவகை செய்யும் என்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.</li>
<li>தென்கொரியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 286 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் 40 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள். </li>
<li>அவர்களின் உயரம், எடை, தாக்கிய நோய்கள், வாழ்க்கை முறை, வாய்வழி சுகாதாரம் உள்ளிட்ட தகவல்களை பரிசோதனை மூலம் சேகரித்திருக்கிறார்கள். </li>
<li>தினமும் அவர்கள் பல் துலக்குவதையும் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள். பற்களை எந்த அளவுக்கு தூய்மையாக பராமரிக்கிறார்கள், வாய் சுகாதாரம் பற்றி எந்த அளவுக்கு விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.</li>
<li>10 ஆண்டுகள் அவர்களை பரிசோதனை செய்து வந்ததில் முறையாக பல் துலக்காதவர்களில் 4,911 பேர் ஒழுங்கற்ற இதய துடிப்பு பிரச்சினைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. </li>
<li>அதுபோல் 7,971 பேர் இதய செயலிழப்பு பாதிப்பையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். </li>
<li>அதேவேளையில் பல் துலக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.</li>
<li>தினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் துலக்குபவர்களுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்படுவதற்கான அபாயம் 10 சதவீதம் குறைவாக இருக்கிறது. </li>
<li>அதுபோல் இதயம் செயலிழப்புக்கான அபாயமும் 12 சதவீதம் குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. </li>
<li>இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட தென்கொரியாவில் உள்ள ஈவா பெண்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி டே-ஜின் சாங், ‘‘நாங்கள் ஒரு பெரிய குழுவை நீண்ட காலமாக ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தோம். எங்களது முயற்சிக்கு தக்க பலன் கிடைத்துள்ளது’’ என்கிறார்.</li>
</ul>
</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-18261241664282775132020-01-18T08:06:00.003+05:302020-03-10T11:01:33.747+05:30எள்ளின் மகத்துவம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<ul>
<li>எள்ளின் மகத்துவம் | பாஸ்கரன், சித்த மருத்துவர், வேலூர் </li>
<li>“இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.” தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. </li>
<li>எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. </li>
<li>எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. </li>
<li>வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எள்ளில் 20 சதவீதம் புரதமும், 50 சதவீதம் எண்ணெயும், 16 சதவீதம் மாவு பொருட்களும் உள்ளன. </li>
<li>ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. </li>
<li>தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. </li>
<li>எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும்.</li>
<li>எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன. </li>
<li>தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும். </li>
<li>எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும், கண் நரம்புகள் பலப்படுத்தி நலமாக்கும். மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். </li>
<li>எள்ளுருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது. வயதானவர்கள் எள்ளுருண்டையை சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். </li>
<li>இதனால் எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை தரும். இதனால் உடல் சோர்வு குறைந்து சக்தியை தரும் எள்ளை சேர்த்து சூடான சாதத்தோடு உண்டுவர உடல் பலம் அதிகரிக்கும். </li>
<li>எள்ளின் நல்லெண்ணெயை இரு கண்களிலும் விட்டு, தலையில் தடவி சுடுநீரில் மூன்று நாட்கள் தலை முழுகிவர சிவந்த கண், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மென்மை குத்தல் ஆகியவை தீரும்.எள் எங்கும் பயிராகக்கூடிய செடியாகும். </li>
<li>2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடியது. இது ஜாவா போன்ற கடல் சார்ந்த தீவுகளில் உள்ள காடுகளில் இயற்கையாக விளையும் தாவரமாகும். எள்ளில் ஒன்பது வகைகள் உண்டு. </li>
<li>கார எள், சிகப்பு எள், வெள்ளை எள், காட்டு எள், மயில் எள், பேய் எள், காட்டு மயில் எள், மலை எள், சிற்று எள் என்பதாகும். எள்ளில் இருந்து நெய், எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் எல்லா எண்ணெய்களைவிட மிக சிறப்பான மருத்துவ குணம் கொண்டது. </li>
<li>எள்ளை செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய சக்கையினை பிண்ணாக்கு என்பார்கள். இதில் ஏராளமான சத்துகள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது. </li>
<li>கீரைகளுடன் எள் பிண்ணாக்கு சிறிதளவு சேர்த்து உண்பது நல்ல சுவையைத் தரும். </li>
<li>இது மனிதர்களுக்கு ஆரோக்கிய பலம் கூட்டும். மாடு, ஆடு போன்ற விலங்குகளுக்கு அதிகப்படியான உணவாக எள் பிண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது. </li>
<li>தமிழ் வைத்தியத்தில் நல்லெண்ணெய் பெரும்பங்கு வகித்து வருகிறது.நல்லெண்ணெய் கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. </li>
<li>தென்னிந்தியாவில் நல்லெண்ணெய் மூலம் பலகாரங்கள் செய்வது இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். </li>
<li>அதே போல எள்ளு அவியல் செய்து உண்பதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. </li>
<li>எள்ளின் இலைகள் குடல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. </li>
<li>எள் இலையை அரைத்து அதனை உண்பதால் குடல் நோய்களுக்கு தீர்வு காணலாம். </li>
<li>இதன் இலைகளை கசாயம் வைத்து குடிக்கின்றனர். </li>
<li>எள் இலைகளுடன் வெண்ணெய் வைத்து அரைத்து உண்பதால் ரத்த மூலநோய் குணமாகும். </li>
<li>சுடுநீரில் சிறிதளவு எள்ளிலை போட்டு குளியல் செய்ய உடல் வலிகளை போக்கும் சக்தி எள் குளியலில் ஆரோக்கியம் காணமுடியும். </li>
<li>பொதுவாக எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளது என ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. </li>
<li>பனை வெல்லம், கருஞ்சீரகம், எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சினைகளைத் தீர்க்கும்.</li>
</ul>
</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-15679090609826333952019-11-07T07:12:00.002+05:302020-01-21T07:58:25.769+05:30ரத்தசோகையை போக்கும் கேழ்வரகு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<ul>
<li>நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள்,
சமையலறை அஞ்ச றைப்பெட்டியில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உணவினை மருந்தாக பயன்படுத்துவது குறித்து பார்த்து வரு கிறோம். அந்தவகையில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை பிரச்னையை சரி செய்யும் கேழ்வரகு குறித்து பார்க்கலாம். </li>
<li>கோதுமைக்கு இணையான சத்துக் கள் கொண்ட கோதுமையில் இரும்பு,
கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. </li>
<li>பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கி வருகின்றனர்.
கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் தாய்பாலுக்கு இணையான சத்துக் களை கொடுக்கிறது. </li>
<li>வயலுக்கு சென்று வந்த நம் முன்னோர்களும் கேழ்வரகு கூழ் குடித்து காலை முதல் மாலை வரை உற்சாகமாக பணி செய்து வந்ததும் உண்டு </li>
<li>இந்த தானியத்தை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்ப டுதல் நோய்க்கான தேநீர் செய்வது குறித்து பார்க்கலாம். </li>
<li>தேவையான பொருட்கள்: கேழ்வரகு கதிர், பனங்கற் கண்டு .
செய்முறை: கேழ்வரகு கதிரில் உள்ள இலை, தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாத்தி
ரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்க ளின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும். </li>
<li>வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும்.
குழந்தைகளுக்கு பலம் தரும் கேழ்வ ரகு பால் கஞ்சி தயாரிக்கலாம். தேவை யான பொருட்கள்: கேழ்வரகு (முளைக் கட்டியது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, காய்ச்சிய பால்.
செய்முறை: முளைகட்டிய கேழ்வ ரகை அரைத்து பால் எடுக்கவும். </li>
<li>அதனை வானலியில் ஊற்றி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்து கூழ் போல் வந்ததும், அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டுள்ள </li>
<li>கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும். கெட்ட கொழுப்பு களை வெளித்தள்ளி, நல்ல கொழுப்பு களை உடலில் சேர்க்கிறது.
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு உருண்டை தயாரிக்கலாம். </li>
<li>தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, வெள்ளரி விதை, நெய், உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்.
செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து அடை போல் தட்டி வெயிலில் காயவைத்து தயார் செய்து கொள்ளவும். இந்த அடையை நீர் விடா மல் பொடித்து கொள்ளவும். </li>
<li>அதனுடன் வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும். இந்த கலவையுடன் சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக செய்து கொள்ளவும். இந்த உருண்டையை பூப்பெய்திய பெண்களுக்கு செய்து கொடுத்து வருவதால் உடல் பலம் பெறும். இரும்பு சத்து நிறைந்த கேழ்வரகு ரத்த சோகை மட்டுமல்லாது பற்கள், தலைமுடி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. </li>
</ul>
சித்த மருத்துவர் சக்தி சுப்ரமணியன்</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-74069932400025441462019-10-27T08:36:00.002+05:302020-01-21T08:03:54.499+05:30பாதவெடிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk7JuILzq7VHt4bNlwakjLmZfwpEOmqdGrGVayThLFKpgx69Qzz9Lp9dJA5OWKqPdZoyCk6tTNcvMc-NCgRlDGcI9UuJDCHBdSnpjsaqwYs6dp1MQ4Pm_Vk4ZiksuWXxgJSkN7GrDi9ug/s1600/downloadpicture+%25281%2529.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="752" data-original-width="1000" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk7JuILzq7VHt4bNlwakjLmZfwpEOmqdGrGVayThLFKpgx69Qzz9Lp9dJA5OWKqPdZoyCk6tTNcvMc-NCgRlDGcI9UuJDCHBdSnpjsaqwYs6dp1MQ4Pm_Vk4ZiksuWXxgJSkN7GrDi9ug/s320/downloadpicture+%25281%2529.jpg" width="320" /></a><br />
<ul>
<li>முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள எல்லோரும் பெரிய அளவில் மெனக்கெடுகிறோம். </li>
<li>அதேநேரம், நம் உடலை முழுமையாகத் தாங்கும் பாதத்தை கண்டுகொள்வதே இல்லை. </li>
<li>தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். </li>
<li>நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். </li>
<li>அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். </li>
<li>உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.</li>
<li>வெது வெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தை கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். </li>
<li>அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தை தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது. </li>
<li>பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய், கற்றாழை கிரீம் போன்றவற்றைவும் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த வைத்தியம் போதுமானது.அதேநேரம், ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். </li>
<li>குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். </li>
<li>பாத வெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. </li>
<li>வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். </li>
<li>நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். </li>
<li>மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். </li>
<li>பாதவெடிப்பால் உண்டாகும் வலியை உணர முடியாததால் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.</li>
<li>பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. </li>
<li>பாதவெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக மெல்லிய தோல்களையுடைய செருப்புகளையே அணிய வேண்டும். </li>
<li>மிகவும் இறுக்கமான ‘ஷூ’ அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.</li>
</ul>
</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-17871251591242636342019-10-24T08:16:00.004+05:302020-01-21T07:57:23.981+05:30மாரடைப்பைவிட இதய செயலிழப்பு அதிகமான பேரை கொல்கிறது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<ul>
<li>உலகளாவிய ஆய்வில் தகவல்
இதய செயலிழப்பு ( அநேக நேரங்களில் மாரடைப்பு என்று குழப்பிக்கொள்ளப்படுகிறது. </li>
<li>இதய செயலிழப்பு என் பதற்கு, இதயம் ஏற்கனவே செயலிழந்துவிட்டது என்பது பொருளல்ல. </li>
<li>இதயம் அதன் செயல்பாட்டை நிறுத்தப்போகி றது என்றே பொருள்கொள்ள வேண்டும். </li>
<li>இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவை முற்றிலும் மாறுபட்ட கார ணங்கள் மற்றும் சிகிச்சைகளைக்கொண்டிருக்கின்ற இருவே றுபட்ட இதயநாள நோய்களாகும். </li>
<li>தற்போது, இந்தியா இதய நாள நோய்களின் பெரும் சுமையால் சிக்கி தவித்து வருகிறது, இதயநாள நோய்கள் அனைத்திலும், இதய செயலிழப்பு என்பதே அதிக உயிரிழப்பு விகிதம் மற்றும் திரும்பத் திரும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற வேண்டிய அவசியத்திற்கான முதன்மை காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது</li>
<li>இந்தியாவில், இது 8-10 மில்லியன் நபர்களை பாதிக்கிறது என்று அறியப்பட்டுள்ளது. </li>
<li>55சதவீதம் இதய செய லிழப்பு நோயாளிகள், நோய் கண்டறியப்பட்டதற்குப் பிறகு குறைந்தபட்சம் ஒரு முறையாவது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். </li>
<li>திருவனந்தபுரம் இதய செயலிழப்பு பதிவக அறிக்கையின்படி 31 சதவீதம் நோயாளிகள் அவர்களுக்கு நோய் கண்டறியப்பட் டதிலிருந்து ஓராண்டுக்குள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்</li>
<li>மற்றொரு பக்கத்தில், ஓராண்டுக்கு ஏறக்குறைய 2 மில்லியன் மாரடைப்பு நேர்வுகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில், மற்றும் இதன் காரணமாக, இதயம் வீக்கம் டைந்து பெரிதாகிறது. </li>
<li>இதய செயலிழப்பு அறிகுறிகளுள் மூச் சுத்திணறல் அல்லது அதிவேக இதயத்துடிப்பு, கணுக்கால்கள், கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம், உயரமாக வைக்கப்ப டுகின்ற தலையணைகள் இல்லாமல் தூங்குவதில் சிரமம், தொடர்ந்து நிலையாக களைப்பாக உணர்வது ஆகியவை உள்ளடங்கும்.
</li>
</ul>
</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-63294177598642870572019-10-24T07:21:00.003+05:302019-10-24T07:21:43.975+05:30இதய நோய்க்கான காரணங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மூச்சுத்திணறல், சோர்வு மற்றும் பலவீனம், வேகமான இதயத்துடிப்பு அல்லது அசாதாரணமான இதயத்துடிப்பு, திடீர் எடை அதிகரிப்பு, பசி உணர்வு இழப்பு, அடிவயிறு வீக்கம், கவனம் செலுத்துவதில் கடினம், மார்பு வலி, கால் மற்றும் கால் மணிக்கட்டு வீக்கம் இவை எல்லாம் இருந்தால் மாரடைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.<br />
<br />
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதயத்தில் சிறு சிறு இதர பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் விடும்போது, இதய செயல் இழப்பை தூண்டலாம்.<br />
<br />
ரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் கொழுப்பின் அளவைக் குறைத்து கொள்ளுங்கள். மருந்துகளை சார்ந்து இருப்பதை ஓரளவிற்கு தவிர்க்க பழகுங்கள். ஒருவேளை, மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.<br />
<br />
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உங்கள் தினசரி உணவில், கொழுப்பு அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறே, சர்க்கரை மற்றும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
இதய நோய் ஏற்பட ஒரு மிக முக்கிய காரணம், புகை பிடிப்பது. நிகோட்டின் உட்கொள்ளல், ரத்தக் குழாய்களை சுருக்கி, இதயம் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. கார்பன் மோனோ ஆக்சைடு, ரத்தத்தில் பிராணவாயு அளவைக் குறைக்கிறது, இதனால், ரத்தக் குழாய்களில் சேதம் ஏற்படுகிறது.<br />
<br />
இன்றைய நாட்களில் பலரும் கணினி முன் அமர்ந்து வேலை செய்ய தொடங்கி விட்டனர். அதனால் ஒரு நாள் முழுக்கவே உட்கார்ந்தபடியே முடிந்து விடுகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இருப்பதில்லை. ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் இதய நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே முடிந்த அளவுக்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளவும். மதிய உணவிற்கு பின் சற்று நேரம் உங்கள் அறையிலேயே நடக்கலாம்.<br />
<br />
உடற்பயிற்சி செய்வதற்கு உங்கள் நேரத்தில் சிறிதை ஒதுக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், உடனடியாக எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-12697240928047830452019-10-13T08:27:00.002+05:302019-10-13T08:27:52.484+05:30 இயற்கை தந்த சருமம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இருக்கிறார் ரூபம் சிங். அது ஆறு மாத குழந்தை என்பதால் டாக்டர்களுக்கும் சிகிச்சை அளிப்பது சவாலாக இருந்திருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் நோயை குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். உடுத்திய ஆடை முதல் உபயோகித்த கிரீம் வரை அனைத்தும் சருமத்தில் உராய்ந்து குழந்தைக்கு வேதனையை கொடுத்திருக்கிறது.<br />
<br />
அதை பார்த்து பதறிப்போன ரூபா குழந்தைக்கு பொருத்தமான சரும பராமரிப்பு பொருட்களை தேடத்தொடங்கி இருக்கிறார். எந்த பொருளும் குழந்தையின் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியில் தனது தாத்தா - பாட்டி பின்பற்றிய இயற்கை வைத்தியத்தை நாடி இருக்கிறார். அதன்படி ரசாயன கலப்பில்லாமல் சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து குழந்தைக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார். அது நல்ல பலனை கொடுத்திருக்கிறது.<br />
<br />
‘‘தோல் நோய் பாதிப்புக்குள்ளானதால் எனது மகள் மிகுந்த வலியை அனுபவித்தாள். பச்சிளம் குழந்தையாக இருந்ததால் அவளால் அழுகையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. ஒரு தாயாக அவளின் வலியை குறைப்பதற்கு என்னால் முடிந்த அத்தனை விஷயங்களையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது போல் நவீன மருத்துவமும் இல்லை.<br />
<br />
தோல் மருத்துவர்களை அணுகியபோது மருந்துகளை மட்டுமே வழங்க முடியும் என்றார்கள். குழந்தையின் நிலையை பார்த்த மருத்துவர் மருந்துகளுக்கு பதிலாக இயற்கை வைத்தியத்தை நாட சொன்னார். வெர்ஜின் தேங்காய் எண்ணெய், பருத்தி உடை உள்ளிட்டவற்றை பயன்படுத்தினோம். ஓரிரு மாதங்களிலேயே நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதை பார்த்து அக்கம் பக்கத்தினரும் ஆச்சரியப்பட்டார்கள்’’ என்கிறார், ரூபம் சிங்.<br />
<br />
ரூபம் சிங் ஐதராபாத்தை சேர்ந்தவர். மகளின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் இவரை இயற்கை சரும பராமரிப்பு பொருட்கள் மீது நாட்டம் கொள்ள வைத்திருக்கிறது. தனது சகோதரி அனுபமுடன் சேர்ந்து சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.<br />
<br />
‘‘சருமத்திற்கு நன்மை தரும் இயற்கை பொருட்களை தேடிச்சென்று சேகரிக்கிறோம். அவை சருமத்தின் நலம் காக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இயற்கை மூலப்பொருளாகவே இருந்தாலும் அதனால் சருமத்திற்கு பலன் இல்லை என்றால் அவற்றை பயன்படுத்துவதில்லை. பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களை கொண்டு தயாராகும் பொருட்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிப்பவை. அதிலும் குழந்தையின் மென்மையான சருமத்திற்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். ஒவ்வாமை பிரச்சினையையும் உண்டாகும்’’ என்கிறார்.</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-71689417119956030232019-09-22T07:23:00.000+05:302019-09-22T07:23:25.080+05:30கர்ப்ப காலத்தில் பயணம் நல்லதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
அதுவரை பிடித்ததாக இருந்த உணவு வகைகள் கருவுற்ற பிறகு திடீரெனப் பிடிக்காமல் போகலாம். அதன் வாசனையேகூடக் குமட்டலையும் வாந்தியையும் வரவழைக்கலாம். அதனால், எந்த உணவு பிடிக்கிறதோ அதைச் சாப்பிடலாம். சிலருக்குச் சாம்பல் போன்றவற்றின்மேல்கூட ஆசை ஏற்படலாம்.<br />
<br />
உணவின் ருசியில் வரக்கூடிய திடீர் மாற்றமே வாந்தி, தலைசுற்றலுக்கும் காரணம். வாந்தி வரும் என்று பயந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது தவறு. சிறு சிறு இடைவெளிகளில் சாப்பிடுவதன் மூலமும் அதிகப்படியான திரவ உணவைப் பருகுவதன் மூலமும் இதைக் கையாள முடியும். மிதமான வாந்தி வருபவர்கள், வைட்டமின் B-6 மாதிரியான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.<br />
<br />
கடுமையான வாந்தியால் பாதிக்கப்படும் சிலருக்கு, தண்ணீர் குடித்தால்கூட வாந்தி வரும். அப்படியென்றால் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவது ஆபத்தானது. எது சாதாரணமான வாந்தி, எது மிதமானது, எது சிக்கலானது என்பதை அவரவர்தான் தீர்மானிக்க இயலும். அவர்களாலேயே சமாளித்துவிடக் கூடியது என்றால் பிரச்சினை இல்லை. இரண்டு, மூன்று முறை வந்தால்கூடச் சமாளிக்கலாம். ஒரேயடி யாகச் சமாளிக்க முடியாதபோது மருத்துவரிடம் போக வேண்டும்.<br />
<br />
முதல் மூன்று மாதங்களில் சிலருக்குத் தலைசுற்றல் இருக்கலாம். இதில் பயப்பட ஏதுமில்லை. ஓய்வெடுத்தாலே போதும். சிலருக்கு அதிகப்படி யான களைப்பு இருக்கலாம். எப்போதும் தூக்கம் வருவது போல் இருக்கலாம். காலை யில் எழுந்துவந்து சிறிது நேரம் நடமாடிவிட்ட பிறகு திரும்பவும் தூங்கத் தோன்றலாம். உடலின் உள்ளே நடக்கக்கூடிய மாற்றங்களால் வெளியே தெரியக்கூடிய அறிகுறிகள் இவை. இத னால்தான் நிறைய பெண்களுக்கு இந்த நேரத்தில் அம்மா உடன் இருக்க வேண்டும் எனத் தோன்றும்.<br />
<br />
கர்ப்ப காலத்தில் அதிகப்படி யான காரம், உப்பு, எண்ணெய் நிறைந்த உணவைச் சாப்பிடு வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், வாந்தி எடுக்கும்போது இவற்றால் அதிகப்படியாக வரக்கூடிய நெஞ்சு எரிச்சலைத் தவிர்க்கலாம்.<br />
<br />
ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதைவிட, சிறு சிறு இடை வேளைகளில் பிரித்து உண்பது நல்லது. அன்னாசி, பப்பாளி போன்ற பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இவை கர்ப்பப்பையைச் சுருக்கி விரியச் செய்யும் தன்மையுடையவை. ஆரோக்கியமான கர்ப்பமுடையவர்களுக்கு இது பிரச்சினை இல்லை என்றாலும் சிலருக்குப் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். தேவையில்லாத சிக்கல். எனவே, தவிர்ப்பது நல்லது. மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.<br />
<br />
கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட வற்றல், ஊறுகாய் போன்றவற்றைத் தவிர்க்கலாம் அல்லது குறைவாகச் சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவைவிட அவ்வப்போது சமைக்கப் பட்டவற்றைச் சாப்பிடுவது நல்லது. சாம்பல் சாப்பிடத் தோன்றும்போது ஒரு மாங்காய்த் துண்டையோ எலுமிச்சைத் துண்டையோ சுவைக்கலாம்.<br />
<br />
முதல் மூன்று மாதங்களில் ஆரம்ப அறிகுறிகள், எதிர்பார்ப்புகள், பதற்றங்கள் குறைந்த பிறகு வருகிற இரண்டாம் மும்மாத காலத்தை நல்ல நேரம் என்றே சொல்லலாம். முதல் மூன்று மாதத்தில் வாந்திப் பிரச்சினை இருந்தவர்களில் 60 சதவீதத்தினருக்கு இந்தப் பிரச்சினை நின்றுவிடும். நன்றாகப் பசிக்க ஆரம்பித்து விடும். சாப்பிட்டால் வாந்தி வரும் என்ற பயம் போய், நன்றாகச் சாப்பிடத் தோன்றும். எதைப் பார்த்தாலும் சாப்பிடத் தோன்றும். இதில் எந்தப் பிரச்சி னையும் இல்லை. நன்றாகச் சாப்பிடலாம். ஏனென்றால், முதல் மூன்று மாதங்கள் கரு உருவாவதற்கானவை. இரண்டாவது மூன்று மாதங்கள், கரு வளர்வதற்கானவை. இந்த நேரத்தில் நன்கு சாப்பிட்டுத் தூங்கி தாய்மார்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஹார்மோன் மாற்றங்களெல்லாம் சீரான நிலைக்கு வந்துவிடும்.<br />
<br />
சிலருக்குக் கர்ப்ப காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை வரக்கூடும். மற்ற நேரத்தில் வரக்கூடிய நீரிழிவுக்கும் கர்ப்ப காலத்தில் வரக்கூடிய நீரிழிவுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஏனென்றால், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளில் 99 சதவீத மாத்திரைகளை இந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது.<br />
<br />
ஒன்று உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். அல்லது இன்சுலின் போட வேண்டும். கர்ப்பகால நீரிழிவு நோய் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கர்ப்ப காலம் முடிந்த பிறகு இது தானாகச் சரியாகிவிடும். ஆனால், கர்ப்ப காலத்தில் நீரிழிவு வந்தவர் களுக்குப் பின்னாட்களில் மீண்டும் நீரிழிவு ஏற்படக்கூடும். ஏனென்றால் மன அழுத்தத்தை ஒட்டித்தான் இவர்களுக்கு நீரிழிவு வருகிறது. எனவே, பின்னாட்களிலும் அதே காரணத்தால் வர வாய்ப்பிருக்கிறது.<br />
<br />
நீரிழிவு நோயை அலட்சியப் படுத்தக் கூடாது. அது குழந்தை யைப் பாதிக்கக்கூடும். தாயின் நீரிழிவுப் பிரச்சினை நேரடியாகக் குழந்தையைப் பாதிக்கும். குழந்தை எடை அதிகமாகப் பிறக்கலாம். தண்ணீர் அதிகரிக்கலாம். குறைப்பிரசவமாகலாம். ஆகவே, கர்ப்ப காலத்து நீரிழிவு நோயைக் கண்காணித்து அதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். கர்ப்ப மல்லாத நாட்களில் நீரிழிவு நோயைச் சிலர் மாதக்கணக்கில்கூடப் பரிசோதிக்காமல் விடக்கூடும். ஆனால், கர்ப்ப காலத்தில் மருத்து வர் பரிந்துரைப்பதைச் செய்தே தீரவேண்டும். ஆகவேதான், இந்த நேரத்தில் மகப்பேறு மருத்துவர் தவிர பொதுநல மருத்துவரையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.<br />
<br />
உயர் ரத்த அழுத்தம்<br />
<br />
இதேபோல் கர்ப்ப காலத்தில் கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் ரத்த அழுத்தம் சிலருக்கு வரக்கூடும். இது பெரும்பாலானோருக்கு முதல் பிரசவத்தின்போதுதான் வரும். முன்னதாகவே உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் இது பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். குறைப்பிரசவம், குழந்தைச் சரியான வளர்ச்சியில்லாமல் இருப்பது போன்றவை நிகழலாம். தாய்க்குப் பிரசவ காலத்துக்கு முன் உயர் ரத்த அழுத்தம் அதிகமானால் வலிப்பு வரக்கூடும். இதனால், உயர் ரத்த அழுத்தத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். இதற்காகப் பயப்பட வேண்டாம். கவனத்துடன் இருந்தால் போதும். சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிவது, தக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்றவற்றால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம்.<br />
<br />
கர்ப்ப காலத்தில் வந்த உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய இரண்டுமே பிரசவமான ஆறு வாரத்துக்குள் சரியாகிவிடும். சிலருக்கு அப்போது ஆரம்பித்து, பிரச்சினை தொடர்ந்து நீடிக்கலாம். பரிசோதித்துப் பார்த்துவிடுவது நல்லது. கர்ப்ப காலத்தில் பயணங்களை ஒரேயடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பாதுகாப்பாகப் பயணிக் கலாம். மோசமான வண்டிகள், சாலைகளில் பயணங்களைத் தவிர்க்கலாம். விமானப் பயணத்தையும் முடிந்தால் தவிர்க்கலாம்.<br />
<br />
ஆரோக்கியமான கர்ப்பம் பயணத்தாலோ உடற்பயிற்சிகளாலோ கலையாது. கவனத்துடன் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லியிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-24744747023477292932019-06-30T07:47:00.002+05:302019-06-30T07:47:30.828+05:30அவசியம் தேவை ‘ஆரஞ்சு’<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தீர்வு காண நீண்ட காலம் மாத்திரை உட்கொள்வது சரியான வழிமுறை அல்ல. தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்ளும்போது வேறு விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதேவேளையில் ரத்த அழுத்தத்தை சீராக்காவிட்டால் இதய நோய்கள் எற்படவும் வழிவகுத்துவிடும். ஆரோக்கியமான உணவு வகைகளுடன் ஜூஸ் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். மாதுளை பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவி புரியும். மேலும் பல்வேறு நோய் தொற்றுவில் இருந்தும் உடலை பாதுகாக்கும்.
ரத்த சோகை இருப்பவர்களுக்கும் இது ஏற்றது. ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்வதிலும் மாதுளை முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பிணி பெண்கள் மாதுளை ஜூஸ் பருகுவதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அதேவேளையில் நீரிழிவு நோயாளிகள் மாதுளை ஜூஸ் பருக கூடாது. ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளானவர்கள் ஆரஞ்சு ஜூஸ் பருகுவது நல்லது. அதனை தொடர்ந்து பருகுவதன் மூலம் வளர்சிதை மாற்றமும் மேம்படும். ஆரஞ்சு ஜூஸ் தொடர்ந்து பருகி வந்தால் கண்புரை மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஆரஞ்சு ஜூஸில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நாள்பட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மையும் கொண்டவை.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-86080626062170681022019-06-10T19:32:00.001+05:302019-06-10T19:32:52.746+05:30குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
அமெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் பெயின்பெர்க் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன் குக் மில்ஸ் தலைமையிலான குழு ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது. பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் உணவு இல்லை. இருந்தும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை மற்றும் சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிவதுதான் ஆராய்ச்சியின் நோக்கம்.
பொதுவாக ஒவ்வாமைக்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, மரபு வழி ஜீன்கள். மற்றொன்று, உணவு. இறுதியாக, சுற்றுப்புறச்சூழல். பிறந்து சில நாள்களே ஆன ஓர் எலியைச் சோதனைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதற்கு ஒவ்வாமைக்கான ஜீன்களைச் செலுத்துகின்றனர். அடுத்து, தூசுப் படலத்தை நுகரவைக்கின்றனர். பின்னர், நிலக்கடலைப் போன்ற ஒவ்வாமை உணவுகளைக் கொடுக்கின்றனர். ஆனால், இந்த விஷயங்கள் அந்த எலிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை.
அந்த நேரம் ஜோன் குக்குக்கு பழைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. நம் சருமத்தின் மேற்பரப்பு லிபிட்ஸ்‘ எனும் ஒருவகை கொழுப்பினால் ஆனது. அதுவே நம் சருமத்தின் தடுப்பு அரணாகச் செயல்படுகிறது. சோப்புகளில் இருக்கும் ரசாயனங்கள் அந்த அரண்களை உடைக்கும் தன்மை வாய்ந்தவை என்பது அந்தக் கட்டுரை சொல்லும் செய்தி. ஜோனுக்குச் சட்டென ஒரு பொறி தட்டியது. அது, அவரை அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருந்தது.
தன் சோதனையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கினார். முதலில் எலியின் தோலின் மீது சோடியம் லாரைல் சல்பேட்’ எனும் வேதிப்பொருளைத் தடவினார் (இது பொதுவாக சோப்புகளில் காணப்படும் ரசாயனம்தான்). இரண்டு வாரக் காலத்தில் நான்கு முறை இப்படிச் செய்யப்பட்டது. பின்னர், சில ஒவ்வாமை உணவுகள் அதற்குக் கொடுக்கப்பட்டன. இப்படிச் செய்ததும், மிக விரைவாக எலியின் தோல் பல இடங்களில் தடிக்கத் தொடங்கியது. உடல் முழுக்க ஒவ்வாமை ஏற்பட்டது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மிக முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கிறார் ஜோன்.
“குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் ‘வெட் வைப்ஸ்’ ஒவ்வாமைக்கான மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. இனி வெட் வைப்கள் உபயோகிப்பதைக் குறைத்துக் கொண்டு, முன்னர் செய்தது போலத் தண்ணீரை உபயோகித்துக் குழந்தைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.“ மேலைநாடுகளில் வெட் வைப்ஸ்’ அதிகமாக உபயோகிக்கும் பழக்கம் என்பது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளிலும், சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது. இப்படி ஒருபக்கம் ஒவ்வாமை, ஒவ்வொரு நாட்டிலும் அதிகமாகிக்கொண்டே இருக்க, மறுபக்கம்‘வெட் வைப்ஸ்’களின் உபயோகமும் பரவலாகிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கான எதிர்ப்புகளும் ஒருபக்கம் இருக்கவே செய்கின்றன.
எனினும், ‘வெட் வைப்’, சோப்புகள் உபயோகத்தைக் கூடுமானவரைக் குறைத்துக்கொண்டு, தண்ணீரால் குழந்தைகளின் உடலைச் சுத்தப்படுத்துவதே அவர்களின் உடலைப் பாதுகாக்கும். அதுவே ஆரோக்கியமும்கூட!
</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-37918757848775906782019-06-04T07:12:00.002+05:302019-06-04T07:12:13.099+05:30பாலியல் தூண்டுதலை உருவாக்கும் ‘சாக்லேட்’<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சாக்லேட்டை தான் சுவைத்து மகிழ்ந்த காலம் போய், தனக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கும் பரிசுப் பொருளாகவும் அது புது அவதாரம் எடுத்திருக்கிறது. அதனால் தங்கள் அன்பை வெளிப்படுத்த பிறந்த நாள், திருமண நாள் போன்றவை களுக்கு வாழ்த்துக்களோடு சாக்லேட் பரிசு வழங்குகிறார்கள்.<br />
<br />
சாக்லேட் விற்பனையை தக்கவைத்துக்கொள்வதற்காக, அது பற்றி அவ்வப்போது ஏதாவது ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பெரும் அளவில் இருப்பதாகவும், ரத்த அழுத்தத்தை அது சீராக்கும் தன்மையை கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். ‘டார்க் சாக்லேட்’ உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதயத்திற்கு வலு சேர்ப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.<br />
<br />
உடலுக்கு உற்சாகம் தரும் ‘எண்டோர்பின்’ ஹார்மோனை, சாக்லேட் அதிகம் சுரக்கச் செய்கிறது. இது நரம்புகளை பலப்படுத்தி உத்வேகப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் சாக்லேட் குறிப்பிட்ட மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. அதில் இருக்கும் காபின் மூளையை சுறுசுறுப்பாக்கும். இ்ந்த ஒட்டுமொத்தமான செயல்பாடுகள் சாக்லேட் சாப்பிடும் ஆண் மற்றும் பெண்களிடம் பாலியல் தூண்டலையும் உருவாக்கும் என்றும் சொல்கிறார்கள்.<br />
<br />
டார்க் சாக்லேட் ஒரு பார் சாப்பிட்டால் அதன் மூலம் உடலுக்கு 400 கலோரி கிடைக்கும். மதிய உணவுக்கு பிறகு சாக்லேட் சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அவர்கள் டார்க் சாக்லேட்டில் பாதி அளவு சாப்பிட விரும்புகிறார்கள் என்றால், தாங்கள் சாப்பிடும் உணவில் 200 கலோரியை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணவின் அளவு சமச்சீராக இருக்கும். போதுமான அளவு உணவு சாப்பிட்டுவிட்டு, அதற்கு மேல் சாக்லேட்டும் அதிக அளவில் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல. தேவைக்கு அதிகமான கலோரி உடலில் சேர்ந்துவிடும்.<br />
<br />
வழக்கமான சாக்லேட்டில் பால், சர்க்கரை போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால் அதன் தன்மை மாறும். அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொருத்துதான் சாக்லேட்டின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. உலர் பழங்கள், வேர்க்கடலை, பாதாம், ஆரஞ்சுத் தோல் முதலியவை சேர்க்கப்பட்டிருந்தால் நல்லது. அதிக அளவு வெண்ணெய், சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அவை கோகோவின் நற்குணங்களை செயலிழக்கச் செய்துவிடும். அது உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதல்ல.<br />
<br />
டார்க் சாக்லேட் இனிக்காது. சற்று கசக்கத்தான் செய்யும். கசப்பை போக்க அதனுடன் பால் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பலனளிக்காது. உடல் எடையை குறைக்கவும் சாக்லேட் பயன்படுகிறது. இதை கைதேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்தி, எடையை குறையச் செய்கிறார்கள். உடலில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், புதிய செல்களை உற்பத்தி செய்யவும் சாக்லேட் உதவுகிறது. சாக்லேட்டின் மூலப் பொருளை பயன்படுத்தி ‘கோகோ பட்டர் பாடி வேக்ஸ்’ போன்றவை தயாரிக்கப்பட்டு உடல் முழுவதும் மசாஜ் செய்கிறார்கள். இதன் மூலம் உடல் எடை குறைந்து, தசை இறுக்கமடைவதாக சொல் கிறார்கள். தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், சருமத்தின் நிறம் கூடும். பளபளப்பு, மென்மைத்தன்மை அதிகரிக்கும். கறுப்பாக இருப்பவர்கள் சருமத்தை பொலிவாக்க சாக்லேட் சாப்பிடுவதுண்டு.<br />
<br />
சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் சாக்லேட் ஸ்க்ரப்பை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் கோகோவுடன், 4 ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் மில்க் கிரீம் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும் சிறந்த ஸ்கிரப் ஆகும்.<br />
<br />
சிறிதளவு கோகோ பட்டருடன் தயிர் கலந்து ஒரு துண்டு வாழைப்பழத்தை மசித்து நன்றாக கிரீம் போல தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை முகம், கை கால்களில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். இதன் மூலம் முகம் பளபளப்புடன் ஜொலிக்கும்.<br />
<br />
பாடி பாலிஷ்: கிண்ணத்தில் கோகோ பவுடர் சிறிதளவு எடுத்து, அதில் சிறிது உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து உடல் முழுவதும் பூசிவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் பளபளப்பாகும்.<br />
<br />
சாக்லேட் வேக்ஸ்: இது கடைகளில் கிடைக்கும். இதனை உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். உடலில் உள்ள பழைய செல்களை அகற்றி விட்டு புதிய செல்கள் உருவாக இந்த வகை மெழுகு உதவுகிறது.<br />
<br />
சாக்லேட் ஸ்க்ரப்: இதுவும் சருமத்தின் தன்மைக்கேற்ப பலவிதங்களில் கடைகளில் கிடைக்கும். இந்த ஸ்க்ரப்கள் கொஞ்சம் ரவை போன்று தரியாக காணப்படும். இதனை தோலின் மேல்நோக்கி தேய்ப்பதன் மூலம் இறந்த செல்களை நீக்கிவிடலாம். தோலில் படிந்திருக்கும் கழிவுகளையும் நீக்கிவிட முடியும். இதனை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் தோல் வியாதிகள் வராது.<br />
<br />
சாக்லேட்டில் காபின் உள்ளது. அது தேநீர், காபி, கோக் போன்றவற்றில் இருப்பதை விட மிகக் குறைந்த அளவே உள்ளது. சாக்லேட் பார், ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். அதில் பால் அல்லது வேறு பொருட்கள் கலந்து விட்டால் அதன் தரமும், ஆயுளும் குறைந்து போய்விடும்.<br />
<br />
1842-ம் ஆண்டு் இங்கிலாந்தில் கேட்பரி என்பவர் முதன் முதலில் சாக்லேட் பார்களை தயாரித்தார். அதற்கு முன் அதை பானமாகத்தான் பருகி வந்தார்கள். உலகில் அதிகமாக டார்க் சாக்லேட் சாப் பிடுபவர்கள் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சாக்லேட் சாப்பிடுவதால் ஹார்மோன்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பது பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது. 28 கிராம் டார்க் சாக்லேட் மூலம் உடலுக்குத் தேவையான 10 சதவீத இரும்புச் சத்தை பெறலாம். சாக்லேட் சாப்பிடுபவர்கள் உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். சராசரியாக 15 பேரில் 10 பேர் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். அமெரிக்க நிறுவனங்களில் ஊழியர்கள் உற்சாகமாக பணிபுரிவதற்காக அவர்களுக்கு சாக்லேட் விநியோகிக்கும் வழக்கம் இருக்கிறது.<br />
<br />
கோகோ மரம்<br />
<br />
சாக்லேட்டின் மூலப்பொருளாக இருப்பவை, கோகோ விதைகள். இவை கோகோ மரத்தில் இருந்து கிடைக்கின்றன. கோகோ மரம் வருடத்திற்கு 20 முதல் 50 பழங்களை அளிக்கும். ஒவ்வொரு பழமும் சுமார் அரை கிலோ எடை கொண்டது. அதன் மேல் பகுதி முதலில் பச்சையாகவும், பின்பு மஞ்சளாகவும், இறுதியில் செம்பழுப்பு நிறமாகவும் மாறுகிறது. ஒவ்வொரு பழத்தின் உள்ளும் 30 விதைகள் வரை இருக்கும். இவைதான் சாக்லேட் தயாரிப்பிற்கு மூல பொருளாக இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் கோகோ விதைகள் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மெக்சிகோ கோகோவின் தாயகமாகும். </div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-79920444809715284642019-03-31T08:41:00.002+05:302019-03-31T08:41:57.068+05:30புரதமும்.. நாற்பதும்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல் பருமன் பிரச்சினையும் ஏற்படும். அத்தகைய பாதிப்புகளை தடுப்பதற்கு புரதம் அவசியமானது. 40 வயதை கடந்தவர்கள் தினமும் தங்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவிலாவது புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளையும், எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது.
அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தினமும் இரு வேளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை பிரியர்கள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. சைவம் சாப்பிடுபவர்கள் சோயா பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் சாப்பிடலாம். அதில் புரதம் அதிகம் கலந்திருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கலந்த பொருட்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் நல்ல கொழுப்பு சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதற்கு உதவி செய்யும். மேலும் நீரிழிவு பிரச்சினையில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவும். விரைவிலேயே வயதான தோற்றம் உருவாகுவதையும் தடுக்கும்.
அதுபோல் வைட்டமின் ஏ, சி. இ, கால்சியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்களும் 40 வயதை கடந்தவர்களுக்கு அவசியம். அவை சூரிய கதிர்வீச்சுகளின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கும். வயதான தோற்ற பொலிவையும் தவிர்க்க உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண் களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை தோன்றுவதால் இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடும் குறைந்துபோய்விடும். அதனால் ஹார்மோன் மற்றும் தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 40 வயதை கடந்த ஆண்களை விட பெண்களுக்குத்தான் தசை இயக்கங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் முறையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதும் அவசியமானது.
</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-23330430255380410972018-12-22T08:38:00.002+05:302018-12-22T08:38:46.962+05:30மனச்சிதைவைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மனச்சிதைவு நோயைக் குணப்படுத்த ரஷிய ஆய்வாளர்கள் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
மனநலப் பாதிப்புகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், ரஷியாவில் உள்ள பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி பெற்றுள்ளனர்.
டிஏஏஆர்1 என இப்போதைக்கு குறியீட்டுப் பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்தை ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்திப் பரிசோதித்தனர்.
அதற்கு எதிர்வினையாக எலிகளின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
இந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஏலியா சுக்னோவ் தெரிவித்திருக்கிறார்.
</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-89141091948417370172018-12-22T08:28:00.002+05:302018-12-22T08:28:31.464+05:30ரத்தம் உறையாமை நோய்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போது உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிரை பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய் ஆகும்.<br />
<br />
உடலுக்குள் ரத்த குழாய்க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினை தான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்த நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.<br />
<br />
பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்த நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்த நோய் உள்ளவர் கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்த நோய் உள்ளவர்கள் வலி நிவாரண மருந்துகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்.<br />
<br />
இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமோசோம் களாகவும், பெண்கள் உடலில் xx குரோமோசோம்களாகவும் இருக்கும். x குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே இந்த நோய்க்கு முதன்மை காரணம். ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க முடியாது.<br />
<br />
இரண்டு xx கொண்ட பெண்களுக்கு ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு x உள்ள மரபு பண்புகளைக் கொண்டு ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவும் பெண் என்பதால் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது.<br />
<br />
அவருக்கு வந்ததோ மிக மோசமான ஹீமோபீலியா பி நோய் வகை. இவரது ஐந்து குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக இருந்தார். இதனால் இது அரச நோய் என்ற பெயரையும் பெற்றது. ரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு. அடிபடாமல் கவனமாக இருந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்.<br />
<br />
ரத்த உறவில் திருமணம் செய்வதால் தான் இந்த நோய் அதிகம் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் மூலமே பரவுகிறது. மரபணு காரணமாவதால் இந்த நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால், இதைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-21635528095453158592018-12-01T07:12:00.003+05:302018-12-01T07:12:27.249+05:30உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.<br />
<br />
உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
உடலில் உருவாகும் புற்றுநோய் திசுக்களை எதிர்த்துச் சண்டையிட்டு முறியடிக்கும் ஒருவித செல்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களின் உடல், கொழுப்புகளால் அடைக்கப்படுவதால், அவற்றின் செயல்பாடு நின்று புற்றுநோய் ஏற்படுவதாக அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.<br />
<br />
இங்கிலாந்தில் புற்றுநோயை உண்டாக்கும், அதேவேளையில் தடுக்கும் வாய்ப்புள்ள புற்றுநோய்க்கான காரணிகளில் புகைப்பழக்கத்தை அடுத்து உடல்பருமன் இரண்டாவது இடத்தை வகிப்பதாக அந்நாட்டின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.<br />
<br />
இங்கிலாந்தில் புற்றுநோய் தாக்கும் 20 பேரில் ஒருவர் அல்லது ஓராண்டுக்கு 22 ஆயிரத்து 800 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.<br />
<br />
உடலில் பெரும்பகுதியை கொழுப்பு அடைத்துக்கொண்ட பிறகு அது உடலில் உள்ள செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி, புற்றுநோயை உண்டாக்குகிறதா, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கிறதா என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தனர்.<br />
<br />
இந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் ‘நேச்சர் இம்யூனாலஜி’ இதழில் விளக்கியுள்ளனர்.<br />
<br />
ஒவ்வொருவரின் உடலிலும் இயற்கையாக அமைந்துள்ள புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை அவற்றைப் பாதிக்கும் கொழுப்புகளிடம் இருந்து காப்பாற்றி அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் மருந்துகளை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.<br />
<br />
‘‘இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்கும் சேர்மத்தைப் பரிசோதித்துப் பார்த்தோம். நாங்கள் நினைத்தவாறே அதை முற்றிலும் அழிக்க முடிந்தது’’ என்று பேராசிரியர் லிடியா லிஞ்ச் கூறுகிறார்.<br />
<br />
‘‘புற்றுநோய் அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துவதைவிட உடல் எடையைக் குறைப்பது மற்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு உதவும் சிறந்த வழி’’ என்றும் அவர் கூறுகிறார்.<br />
<br />
‘‘13 வகையான புற்றுநோய் ஏற்பட உடல் பருமனே காரணமாக உள்ளது என்று நமக்குத் தெரிந்தாலும், உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து இதுவரை தெளிவான பதில்கள் கிடைத்திருக்கவில்லை’’ என்று இங்கிலாந்தின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் லியோ கார்லின் கூறுகிறார்.<br />
<br />
‘‘கொழுப்பு மூலக்கூறுகள் எவ்வாறு நோய் எதிர்ப்பு அணுக்களை தனது புற்றுநோய் தடுப்புச் செயல்பாட்டை மேற்கொள்ளவிடாமல் தடைசெய்கிறது என்பதையும், அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான புதிய வழிவகைகளையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.<br />
<br />
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்குக் காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.<br />
<br />
புற்றுநோய் உண்டாவதற்கு புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது, உடல் உழைப்பு இல்லாமை ஆகிய ஐந்து காரணிகளே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.<br />
<br />
அதிலும் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22 சதவீதம் பேரின் பாதிப்புக்குக் காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைபிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.<br />
<br />
உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்குக் காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்கள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.<br />
<br />
புற்றுநோய் பல உறுப்புகளில் ஏற்பட்டாலும், நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் இந்நோய் உண்டாகிறது.</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-17085121745744924732018-11-01T07:22:00.002+05:302018-11-01T07:22:29.448+05:30காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை. பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் விளக்கம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை. பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் விளக்கம் <br />
<br />
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தீவிரமாக உள்ளது. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காய்ச்சல்களின் தீவிரத்தால் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் குறித்து தெரிந்துகொண்டு விழிப்புணர் வுடன் இருக்கும்படி தமிழக சுகா தாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.<br />
<br />
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி, செய்தியாளரிடம் கூறியதாவது:<br />
<br />
இது டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சலாகும்.<br />
<br />
எப்படி பரவுகிறது?<br />
<br />
நல்ல நீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவுகிறது.<br />
<br />
கொசு உற்பத்தியாகும் இடம்<br />
<br />
டயர், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், திறந்த கிணறு, பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் கப்களில் தேங்கும் நீரில் உருவாகிறது. ஏடிஸ் கொசு மூன்று வாரம் உயிர் வாழும். இந்த மூன்று வார காலத்தில் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளையிட்டு இனப்பெருக் கம் செய்கிறது. ஏடிஸ் கொசு பகலில் மனிதர்களை கடிக்கும் தன்மையுடையது.<br />
<br />
காய்ச்சலின் அறிகுறிகள்<br />
<br />
காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறி களாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும் தன்மை உடையது. ரத்த தட்டணுக் களின் எண்ணிக்கை குறையும் போது நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர் பாதையில் ரத்த கசிவு ஏற்படும்.<br />
<br />
கவனிக்க வேண்டியவை<br />
<br />
டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருத்துவ சிகிச்சைப் பெற வேண் டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்கி உட் கொண்டாலோ, போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.<br />
<br />
எவ்வாறு குணப்படுத்தலாம்?<br />
<br />
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை யும், முறையான கவனிப்பும் கொடுத்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம். டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற் றும் மருத்துவ மனையில் கொடுக்கப் படும் உயிர்காக்கும் ஓஆர்எஸ் கரைசல் போன்ற நீராகாரம் தேவை யான அளவு கொடுக்க வேண்டும்.<br />
<br />
காய்ச்சல் நின்ற பின்னர் மூன்று நாட்களுக்கு மிகவும் கவன மாக இருக்க வேண்டும். பசி எடுக்க வில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் டாக்டரிடம் செல்ல வேண்டும்.<br />
<br />
வராமல் தடுக்க<br />
<br />
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் இடங் களை அழிக்க வேண்டும். வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை யாக வைத்துக் கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.<br />
<br />
பன்றிக்காய்ச்சல்<br />
<br />
பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப் பட்டது. ஆரம்பத்தில் பன்றி களிடையே இந்த காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர் களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவுவதில்லை. ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமிகளால் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது.<br />
<br />
அறிகுறிகள் என்ன?<br />
<br />
சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறி களாகும். சிலருக்கு இந்த அறிகுறி களுடன் வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.<br />
<br />
எப்படி பரவுகிறது?<br />
<br />
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் இருமும்போதோ, தும்மும்போதோ வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவு கிறது. இந்த கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல் வேறு பொருட்களை நாம் தொடும் போது, நம்முடைய கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. அதன் பின் நாம் கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது நமக்கும் கிருமி தொற்று ஏற்படுகிறது.<br />
<br />
வராமல் தடுப்பது எப்படி?<br />
<br />
வீட்டில் இருந்து பள்ளி, அலுவல கம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பியவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் மிகவும் நல்லது. கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகியிருக்க வேண்டும்.<br />
<br />
மாத்திரை, மருந்துகள் என்ன?<br />
<br />
பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரை உள்ளது. டாக்டர்களின் ஆலோசனைப்படி டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் காய்ச்சல் குணமாகிவிடும்.<br />
<br />
காய்ச்சல் வந்தால்..<br />
<br />
காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோ சனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ ஆலோ சனை இல்லாமல் தாமாகவே கடைகளுக்கு சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. பள்ளி, அலுவலகம் மற் றும் பொது இடங்களுக்கு செல் வதை தவிர்க்க வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல் லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். பயன்படுத்திய கைக் குட்டை மற்றும் இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.<br />
<br />
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை<br />
<br />
டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக சிறப்பு காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.<br />
<br />
இவ்வாறு அவர் கூறினார்.டெங்கு காய்ச்சல்: காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும். பன்றி காய்ச்சல்: சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-61653227746968725892018-10-21T08:58:00.003+05:302018-10-21T08:58:35.422+05:30பெண்களின் உடல் மணக்கட்டும்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.
நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பி கள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன.
எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது.
இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி?
வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும்.
வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன் படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்து வரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கி யிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.
தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர் களாக இருக்கிறார்கள். வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால் வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும். ரோல் ஆன் பயன்படுத்தும்போது முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.
<br />
டியோடரண்டுகள் பயன்படுத்துகிறவர்கள் கவனிக்க..<br />
<br />
ரசாயனப் பொருட்களின் கலவைதான் டியோடரண்டுகளாக உருவாகின்றன. எல்லோருடைய சருமத்திற்கும், எல்லா விதமான ரசாயனங்களும் ஒத்துக்கொள்ளாது. ஒத்துக்கொள்ளாததை பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும். சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அதை பயன்படுத்தாதீர்கள்.<br />
<br />
டியோடரண்ட் பயன்படுத்தும் ஆண்கள், முகசவரம் செய்த உடன் இதனை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் சொறி, திட்டாக தடித்தல் போன்றவை ஏற்படும். இந்த தொந்தரவை தவிர்க்க ஒரு மணி நேர இடைவெளியாவது அவசியம்.<br />
<br />
திரவம் மற்றும் ஸ்பிரே வடிவில் இருக்கும் டியோடரண்ட்டை நன்றாக குலுக்கிவிட்டு பயன்படுத்துங்கள்.<br />
<br />
சில வகை டியோடரண்டுகள் வியர்வையோடு செயல்பட்டு அணியும் உடைகளில் மஞ்சள் நிறத்தை உருவாக்கிவிடும். அதை கவனத்தில்கொண்டு பயன்படுத்துங்கள். ஒரே இடத்தில் அதிக அளவு டியோடரண்டு பயன்படுத்த வேண்டாம்.<br />
<br />
எந்த டியோடரண்டை பயன்படுத்தி வியர்வை வாடையை போக்கலாம் என்று திட்டமிடுவதற்கு பதில், உடலை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக அக்கறை செலுத்துங்கள். தினமும் குளித்து, உடலை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பது, டியோடரண்டு பயன்பாட்டை குறைக்கும். உடலையும் மணக்கச் செய்யும்.</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4756005868367927619.post-70483643533904802912018-10-14T08:43:00.003+05:302018-10-14T08:45:51.776+05:30கருப்பட்டி வெல்லத்தின் சிறப்புகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjerO-zzIItY9Mdufu0TAPnQS22FqCKWAJ7xFMLSDoIuXf_iLY9MLw47OukI9_a0hJXsnON7TXeHejEOS-4H37_xyYrMnnRqXJxHofgFgBB2ckUICFPgJYZmWziZbCWwADmtobSJI53KBU/s1600/kalvisolai.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="487" data-original-width="895" height="218" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjerO-zzIItY9Mdufu0TAPnQS22FqCKWAJ7xFMLSDoIuXf_iLY9MLw47OukI9_a0hJXsnON7TXeHejEOS-4H37_xyYrMnnRqXJxHofgFgBB2ckUICFPgJYZmWziZbCWwADmtobSJI53KBU/s400/kalvisolai.png" width="400" /></a>கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள். மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியை தட்டி போட்டு காபி தூள் கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மேல் வலி எல்லாம் குறைஞ்சு சுறுசுறுப்பாகிவிடுவர். அந்தளவிற்கு கிராமத்து பகுதிகளில் கருப்பட்டி உபயோகம் பெரும்பாலும் காபி போடத்தான் பயன்பட்டது. அதுபோல் சில பகுதிகளில் இனிப்பு பலகாரங்கள் செய்ய கருப்பட்டி மட்டுமே பயன்படுத்துபவர்களும் உள்ளனர். நாம் தமிழ்நாட்டு மக்களோடு ஒன்றிணைந்த கருப்பட்டி பயன்பாடு சர்க்கரை வந்த பிறகு பெரும்பாலும் குறைந்து விட்டது. தற்போது மீண்டும் மக்களிடம் கருப்பட்டி பயன்பாடு அதிகரித்து உள்ளதன் காரணமாக அது குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
கருப்பட்டி எனும் பனை வெல்லம்
பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இதனை பனை வெல்லம், பனாட்டு, பனை அட்டு என்று சொல்வார்கள். தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பனை மரங்கள் மூலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். பங்குனி, சித்திரை மாதங்கள் பதநீர் இறக்குவது அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் கருப்பட்டி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
வட்ட வடிவிலான இரும்பு பாத்திரமே கருப்பட்டி காய்ச்ச பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தாச்சு என்று பெயர். இதில் சுமார் 15 லிட்டர் பதநீரை ஊற்றி இரண்டு மணி நேரம் கிளறி பதம் வந்ததும் எடுத்து அச்சுகளில் வார்த்து எடுத்தால் அதிகபட்சம் 3 கிலோ அளவிற்கே கருப்பட்டி கிடைக்கும். இதன் காரணமாக கருப்பட்டி உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கே மேற்கொள்ளப்படும். ஆனால் ஆண்டு முழுவதும் சில்லு கருப்பட்டியின் தேவையுள்ள காரணத்தால் அதில் ஏராளமான கலப்படங்கள் செய்து விற்பனைச் செய்யப்படுகின்றன. எனவே, கருப்பட்டி வாங்கும்போது நல்ல தரமான கருப்பட்டி தானா என்பதை கண்டறிந்து வாங்குதல் வேண்டும்.
தரமான கருப்பட்டி கண்டறியும் முறைகள்
நல்ல தரமான கருப்பட்டி என்பது சீக்கிரமாக கரையாது. தண்ணீரில் ஒரு துண்டு கருப்பட்டியை போட்டால் அது முழுதாக கரைய ஒன்றரை மணி நேரம் ஆகும். போலியான கருப்பட்டி என்பது சீக்கிரமே கரைந்து விடும்.
கருப்பட்டியை நாவில் வைத்து சுவைக்கும்போது கரிப்பு தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருக்கும். அதுபோல் கருப்பட்டியில் உட்புறப் பகுதி என்பது கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலானதாக இருக்கும். இதுவே பளபளப்பாக காட்சி தந்தால் அது போலி கருப்பட்டி என்பதாகும்.
அதுபோல் விவரமறிந்தவர்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து சோதித்து பார்த்து வாங்குவது நலம். ஏனென்றால் உற்பத்தி குறைவு, பனை மரம் இன்மை போன்றவைகளால் சற்று விலை கூடுதலாக தான் கருப்பட்டி கிடைக்கும்.
கருப்பட்டியில் மருத்துவ குணங்கள்
கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.
கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.
கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.
கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. குழந்தைகள் உணவு சாப்பிடாடல் அடம் பிடிக்கும்போது சீரக கருப்பட்டி உருண்டையை செய்து கொடுத்து விடுங்கள் பிறகு குழந்தைகள் நன்றாக சாப்பிட ஆரம்பித்து விடும். காலசூழலில் கருப்பட்டி பயன்பாடு குறைந்து விட்ட போதிலும் தற்போது மீண்டும் கருப்பட்டி பலகாரங்கள் பல கடைகளில் கிடைக்க ஆரம்பித்துள்ளன.
</div>
<div style="text-align: center;">
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-4149353068008796";
google_ad_slot = "4075335067";
google_ad_width = 336;
google_ad_height = 280;
google_language="en";
</script>
<!-- MI AD 3 -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
</script>
<br />
<script async="" src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-4149353068008796",
enable_page_level_ads: true
});
</script>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s1600/PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="கல்விச்சோலை - kalvisolai health tips" border="0" data-original-height="267" data-original-width="555" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCx3qDnWRMtohJPYt5vX2EOj3EolYjYBSe1TddpDq26xx0kIIEKsZAMu1r6Ax5VBcPN948GBk9ubj6O2_BYJIWjrbYcvlb10MlU0VpbTNV35u620kXRuNflyI_KZnkqZsmDtnMAeAscQk/s400/PS.png" title="கல்விச்சோலை - kalvisolai health tips" width="400" /></a></div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0